www.garudabazaar.com

"நான் BiggBoss-அ விட்டு போனாதான் என் அருமை தெரியும்!".. ராஜூவிடம் தாமரை ஆதங்கம்! பிரியங்காவின் Viral Reply!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தான் பிக்பாஸ் வீட்டை விட்டு போனாதான் தன் அருமை தெரியும் என்று தாமரைசெல்வி ஹவுஸ்மேட்ஸிடம் பேசியுள்ளார்.

after i went from biggboss only you will know my value thamarai

இந்நிலையில் ராஜூ தூங்குவது குறித்து தாமரை பேசியது அதற்கு ஹவுஸ்மேட்ஸ் எழுப்பிய விமர்சனங்களுமே பிக்பாஸ் வீட்டில் ஒரு சைலண்ட் பிரச்சனையை கிளப்பியது.

பிரியாணி சாப்பிட்டு தூங்குகிறான்:

முன்னதாக ராஜூ படுத்து தூங்குவதை பார்த்த தாமரை செல்வி, “பிரியாணி திண்ணுட்டு தூங்குறான் பாரு..  முதல்ல நீ எழுந்தரி... நான் கேப்டன்.. கேப்டன் சொல்லியும் இப்படி தூங்கிட்டு இருந்தா என்ன அர்த்தம்? அப்புறன் நான் கேப்டன்ங்குறதுக்கு என்ன மரியாதை?” என்று தனக்கே உண்டான டோனில் கேட்டார்.

after i went from biggboss only you will know my value thamarai

அந்த சமயம் பிரியங்கா தாமரைக்கு மேக்-அப் போட்டுக்கொண்டு இருந்தார். இதுவும் ஒரு ஆச்சரிய நிகழ்வு என்றுதான் சொல்ல வேண்டும். ஏன் என்றால், இந்த அளவுக்கு தாமரையும் பிரியங்காவும் ஒன்றாக இருந்ததை கடந்த வாரங்களில் எல்லாம் காண முடியவில்லை.

தாமரை Vs பிரியங்கா:

இடையில் ஒரு முறை பிரியங்கா, நாடகம் போடாதே என தாமரையை சொன்னதை அடுத்து, தாமரை அதை, தன் தொழிலுடன் தொடர்புப் படுத்தி அர்த்தப் படுத்திக்கொண்டதால் மிகவும் வருந்தினார். அதன் பின்னர் தாமரை சமாதானம் படுத்திய கமல்ஹாசன், அது உங்கள் தொழில்தானே? அதில் வருத்தப்படவோ, கோபப்படவோ ஒன்றும் இல்லை, பெருமையாக சொல்லுங்கள் என அறிவுரை கூறினார்.

after i went from biggboss only you will know my value thamarai

நான் போனா தான் என் அருமை தெரியும்:

இந்நிலையில் தான் பிரியங்கா தாமரைக்கு மேக்கப் போட, அப்போது ராஜூவை தாமரை எழுந்தரிக்க சொல்லி திட்டுகிறார். அதற்கு ராஜூ, “நீ இரிட்டேட் பண்ற.. நான் தூங்குனா நாய் கொலைக்கும்” என்று சொல்ல, மனம் வருந்திய தாமரை, “என்னடா இப்படி சொல்ற? நான் போனா தான் என் அருமை தெரியும்.” என்று சொல்லிவிட்டு பிரியங்காவிடம், “அவன் சொல்ற மாதிரியா பேசுறேன்? நீயே நாமினேட் செஞ்சிடுவியே” என தாமரை கேட்கிறார். பதிலுக்கு பிரியங்கா, “ஆமா.. இப்படியே பேசுனா கண்டிப்பா நாமினேட் பண்ணிடுவேன்” என சொல்லிக்கொண்டே தாமரைக்கு மேக்கப் போடுகிரார் பிரியங்கா. 

after i went from biggboss only you will know my value thamarai

பின்னர் அக்‌ஷராவும், வருணும் சேர்ந்துகொண்டு, “ஆமா, அக்கா ரொம்ப பேசுறீங்க.. ஃப்ரீயா விடுங்க” என்று தன் பங்குக்கும் பேசினர். சஞ்சீவோ,  ராஜூ விளையாடுவதாக தாமரையிடம் கூறி சமாதானம் படுத்த முயற்சித்தார். ஆனால் தாமரை தன் மனநிலையில் இருந்து வெளிவரவில்லை. 

தொடர்புடைய இணைப்புகள்

after i went from biggboss only you will know my value thamarai

People looking for online information on BIGGBOSS TAMIL, BiggBoss5, BiggBossTamil5, Priyanka, Priyanka cries, Raju, Thamarai cries, Thamarai Selvi will find this news story useful.