www.garudabazaar.com
iTechUS

"அப்பா ஃபோட்டோ கூட இல்ல.. கருப்பா, சிவப்பா-னு கூட தெரியாது".. உருக்கமாக பேசிய நடிகர் சிவகுமார்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உழவன் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற உழவன் விருதுகள் வழங்கும் விழாவில் நடிகர் சிவகுமார் மறைந்த தனது தந்தை குறித்து உருக்கமாக பேசியிருக்கிறார்.

Actor sivakumar speech about his father in uzhavan viruthugal

                            Images are subject to © copyright to their respective owners.

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர்களில் ஒருவராக அறியப்படுபவர் சிவகுமார். 1965 ஆம் ஆண்டு காக்கும் கரங்கள் படத்தின் மூலமாக சினிமா உலகில் கால்பதித்தார் சிவகுமார். இவருடைய மகன்களான நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களாக அறியப்படுகின்றனர். இந்நிலையில், கார்த்தி நடத்திவரும் உழவன் அறக்கட்டளை சார்பில் உழவன் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றிருக்கிறது. அதில் கலந்துகொண்ட சிவகுமார் தன்னுடைய பெற்றோர், மனைவி மற்றும் சிறுவயது காலம் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.

தனது தந்தை பற்றி அவர் பேசுகையில்,"நான் பத்து மாத குழந்தையாக இருக்கும்போது எனது அப்பா இறந்து விட்டார். புகைப்படம் இல்லாததால் அப்பா கருப்பா சிகப்பா என்று கூட தெரியாது. அப்பா இருந்திருந்து அம்மா இறந்திருந்தால் இன்று நான் அனாதையாக இருந்திருப்பேன். இந்த மேடையில் நின்று இருக்க மாட்டேன். சூர்யா, கார்த்தி பிறந்திருக்க மாட்டார்கள். உழவன் அறக்கட்டளையும் அகரம் அறக்கட்டளையும் இருந்திருக்காது. பெண்கள் தான் படைப்பு கடவுள். அதில் எந்த குழப்பமும் வேண்டாம். 5000 ஆண்கள் சேர்ந்தாலும் ஒரு குழந்தையை பெற்றெடுக்க முடியாது" என உருக்கமாக குறிப்பிட்டார்.

சிறுவயதில் தன்னுடைய கிராமத்தில் மின்சார வசதி இல்லாத நேரத்திலும் வாழ்ந்ததாக குறிப்பிட்ட சிவகுமார், அப்போது சாப்பிட்ட சத்தான உணவுகளின் காரணமாகவே இப்போதும் நலமுடன் இருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் தங்களுடைய வீட்டில் வளர்ந்த கால்நடைகள் குறித்தும் அவற்றுடன் தான் கொண்ட பிணைப்பு பற்றியும் நெகிழ்ச்சியுடன் பேசினார்.

பின்னர் தன்னை படிக்க வைக்க தனது தாய் பெரும் சிரமங்களை சந்தித்தாக குறிப்பிட்ட சிவகுமார்,"வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று இங்கு வந்தேன். எனது அம்மா ஏழு வருடங்கள் வெறும் ராகி கூழை சாப்பிட்டு காலை 7:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை வயலில் வேலை செய்தது நான் முன்னேற வேண்டும் என்பதற்காக தானே? அதற்காக தான் பட்டணம் வந்து படித்தேன். அந்த ஒத்தை பொம்பளை 32 வருடங்களாக விதவையாக இருந்து என்னை வளர்த்ததால்தான் நான் இங்கு நிற்கிறேன். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், வீரபாண்டிய கட்டபொம்மனாகவே இருந்தாலும், தாய் இல்லை என்றால் யாரும் இல்லை தாய் தான் கடவுள். அவள் போட்ட பிச்சையால் தான் நான் இங்கு இருக்கிறேன்" என உணர்ச்சிபொங்க பேசினார்.

தொடர்புடைய இணைப்புகள்

Actor sivakumar speech about his father in uzhavan viruthugal

People looking for online information on Karthi, Sivakumar, Uzhavan foundation will find this news story useful.