SHOCKING - நடிகர் சுஷாந்த் சிங் மரணம்... எட்டு பிரபலங்கள் மேல் வழக்கு பதிந்த வழக்கறிஞர்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இளம் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் இந்தியாவையே உலுக்கி உள்ளது. அழகும் திறமையும் உள்ள ஒரு நடிகர் ஏன் இவ்வாறான முடிவை மேற்கொள்ள வேண்டும் என்று பலரும் குழப்பத்தில் உள்ளனர். மன அழுத்தம் தான் அவரது மரணத்திற்கு காரணம் என்று பலரும் கூறி வரும் நிலையில், இது தற்கொலை அல்ல கொலை என்று அவரது குடும்பத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

சுஷாந்த் தற்கொலை 8 பிரபலங்கள் மேல் வழக்கு advocate files case against celebrities for sushant singh death

இந்நிலையில் ANI செய்தியின் அடிப்படையில்  பீகார் நீதிமன்றத்தில் சுதீர் குமார் ஓஜா என்ற வழக்கறிஞர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு வழக்கு பதிந்துள்ளார். அதில் கரன் ஜோகர், சஞ்சய் லீலா பன்சாலி, சல்மான்கான், ஏக்தா கபூர் உட்பட 8 பேர் மேல்  வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் அந்த வழக்கில் அவர்" சுஷாந்த் ஏழு படங்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் மற்றும் அவரது சில படங்கள் வெளிவரவில்லை. இந்த சூழ்நிலை தான் அவரை அந்த முடிவு எடுக்க தள்ளியது" என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

சுஷாந்த் தற்கொலை 8 பிரபலங்கள் மேல் வழக்கு advocate files case against celebrities for sushant singh death

People looking for online information on Case, Salman Khan, Suicide, Sushant Singh will find this news story useful.