#BREAKING - சுந்தர்.சியின் அரண்மனை-3 : பேய் படம்தான்.. ஆனா இது..! Exclusive Updates.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சுந்தர்.சி இயக்கி வரும் அரண்மனை-3 படம் குறித்து பிரத்யேக தகவல் தற்போது தெரிய வந்துள்ளது.

சுந்தர்.சியின் அரண்மனை-3யின் செம தகவல்கள் | Sundar.c's Aranmanai-3 starring arya, rashi khanna, andrea's next level update is here.

சுந்தர்.சி இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் அரண்மனை-3. ஆர்யா கதாநாயகனாக நடிக்கும் இத்திரைப்படத்தில் ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்‌ஷி அகர்வால், விவேக், மனோபாலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அரண்மனை-3 படத்தின் படப்பிடிப்பு குஜராத் அருகில் உள்ள பேலஸில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அரண்மனை-3 படத்தின் படப்பிடிப்பு குறித்து பிரத்யேக தகவல் தெரிய வந்துள்ளது. தற்போது ராஜ்கோட்டில் படப்பிடிப்பை நடத்தி வரும் படக்குழு, இதை முடித்துவிட்டு, அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கு பொல்லாச்சியை டிக் அடித்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் முந்தைய இரண்டு பாகங்களை போல் இல்லாமல், இந்த பாகத்தில் முற்றிலும் வேறு கலரில் அரண்மனை-3 படம் தயாராகவுள்ளதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்திலும் சுந்தர்.சி ஸ்டைலில் செம காமெடியும், பக்கா ஹாரரும் கண்டிப்பாக ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் எனவும் கூறுகிறார்கள் விஷயமறிந்த கோலிவுட்வாசிகள். 

Entertainment sub editor