இறந்த பிறகு நரகத்துக்கு போனதாக கூறிய அமெரிக்கர்.! இதுபற்றி அவர் சொன்னது என்ன ?

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Jan 31, 2023 03:29 PM

மாரடைப்பால் தான் இறந்த பிறகு நரகத்திற்கு சென்றதாகவும் அங்கே பல பயங்கரமான விஷயங்களை பார்த்ததாகவும் அமெரிக்கர் ஒருவர் தெரிவித்திருப்பது உலக அளவில் தற்போது வைரலாக பேசப்பட்டு வருகிறது.

US Man says he went to hell after a near death experience

                         Images are subject to © copyright to their respective owners.

Also Read | "இவரு எங்க அப்பா.. ஆனா அவருக்கு அது தெரியாது".. மறதி நோயால் பாதிக்கப்பட்ட நபர்.. கண்கலங்க செய்யும் வீடியோ..! 

பொதுவாக நாம் இறந்த பிறகு என்ன நடக்கும் என ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை முன்வைத்து பார்த்திருப்போம். சிலர் மரணத்தின் விளிம்பு வரை சென்று அதில் இருந்து பிழைத்து உடல்நலம் தேறியிருப்பார்கள். அப்படியான சிலர் அந்த சூழ்நிலையில் தாங்கள் மரணமடைந்ததாகவும் அதன்பிறகு தங்களுக்கு நேர்ந்த அனுபவங்கள் குறித்தும் பிறகு பேசுவதையும் நாம் சமூக வலைதளங்கள் மூலமாக அறிந்து வருகிறோம். அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த ஜெரால்ட் ஜான்சன் என்பவர் தான் மாரடைப்பால் இறந்த பிறகு நரகத்திற்குச் சென்றதாக தெரிவித்திருப்பது உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

US Man says he went to hell after a near death experience

Images are subject to © copyright to their respective owners.

அமெரிக்காவின் மிச்சிகன் பகுதியில் பாதிரியாராக இருப்பவர் ஜெரால்ட் ஜான்சன். இவருக்கு திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. அப்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெரால்ட் மருத்துவர்களின் உயிர்காக்கும் சிகிச்சையின் மூலம் குணமாகி இருக்கிறார். இதனிடைய அப்போது தான் இறந்து விட்டதாகவும் தன்னுடைய உடலில் இருந்து ஆவி வெளியேறுவதை தான் பார்த்ததாகவும் தெரிவித்து அனைவரையும் அதிர வைத்திருக்கிறார் ஜெரால்ட்.

இது குறித்து அவர் பேசுகையில்," என்னுடைய உடம்பிலிருந்து ஆவி வெளியேறியது. நான் வாழ்வில் பல நன்மைகளை செய்திருக்கிறேன். அதனால் இறந்த பிறகு என்னுடைய ஆவி சொர்க்கத்திற்கு செல்லும் என்று நினைத்திருந்தேன். ஆனால் மாறாக என்னுடைய ஆவி பூமிக்கு அடியே சென்றது. அங்கு தான் நரகம் இருக்கிறது" எனக் கூறியுள்ளார்.

US Man says he went to hell after a near death experience

Images are subject to © copyright to their respective owners.

தொடர்ந்து அவர் பேசுகையில் வாழ்க்கையில் தனக்கு தீமை செய்தவர்களையும் தான் மன்னிக்காதது தான் இதற்கு காரணம் என்றும் தெரிவித்திருக்கிறார். மேலும் நாய் போல நான்கு கால்களில் நடக்கும் மனிதர் ஒருவரை அங்கு சந்தித்ததாகவும் ஜெரால்ட் தெரிவித்திருக்கிறார். மேலும், நரகத்தில் இசையை கேட்டதாகவும் ஆவிகளை கட்டுப்படுத்த இசை அங்கே பயன்படுத்தப்படுவதாகவும் கூறியுள்ளார் ஜெரால்ட். இப்படி, தன்னுடைய நரக அனுபவம் பற்றி அவர் பேசிய கருத்துக்கள் அனைத்தும் உலக அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Also Read | பளபளக்குது புதுநோட்டு.. ஊழியர்களுக்கு கட்டுக்கட்டாக போனஸ்.. கைநிறைய கரன்ஸிகளுடன் சென்ற பணியாளர்கள்.. யாருப்பா நீங்க..?

Tags : #US MAN #HELL

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. US Man says he went to hell after a near death experience | World News.