"டிரம்ப்பின் H-1B விசா முடிவு!".. 'சோதனைக் காலத்தில்' தள்ளாடத் தொடங்கும் 'முக்கிய' ஐடி நிறுவனங்கள்?

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Jun 23, 2020 12:01 PM

அமெரிக்காவில் H-1B and L-1 விசாக்களின் மூலம் தங்கி பணிபுரிபவர்களுக்கு இந்த விசாக்களின் மீதான தற்காலிகத் தடையை இந்த ஆண்டு இறுதிவரை அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் நீட்டித்துள்ளார்.

These major IT firms are in red due to Trumps Call in H1B Visa

இதனால் Wipro, TCS மற்றும் Infosys உள்ளிட்ட ஐடி நிறுவனங்கள் அபாயத்தில் உள்ளதாக ஆய்வுகள் வெளியாகியுள்ளன. சுமார் 4 லட்சம் ஊழியர்கள் இதனால் பாதிக்கப்படுவதாக வெளியான அதிரடி ரிப்போர்ட்கள் கதிலகலங்க வைத்துள்ளன.

1948-ஆம் ஆண்டுக்கு பின்னர் அமெரிக்காவில் தற்போதுதான் வேலையில்லா திண்டாட்டத்தின் விகிதம் 13.3 % ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் இந்திய ஊழியர்களின் நிலை தற்போது டிரம்பின் விசா விவகார முடிவினால் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவைப் பொருத்தவரை வரும் 2025-ஆம் ஆண்டு வரை, 75% ஊழியர்களை மட்டுமேக் கொண்டு செயல்பட ஐடி நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதால், அலுவலக மற்றும் நிர்வாகச் செலவுகளை குறைத்து உற்பத்தி செலவுகள் அதிகரிக்கவும், இந்த கொரோனா சூழலில் ஐடி துறையில் ஏற்பட்ட தடுமாற்றம் சீராக வாய்ப்புள்ளதாகவும் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. These major IT firms are in red due to Trumps Call in H1B Visa | World News.