பிறந்து 4 மாசம் தான் ஆகுது... 'சுயமா' சம்பாதிச்சு கோடீஸ்வரர் ஆயாச்சு!.. இந்த பிசினஸ்ல இவ்ளோ லாபமா!?

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manishankar | Jul 06, 2020 04:28 PM

நைஜீரியாவில் பிறந்த 4 மாத குழந்தை தானாகவே பெரும் கோடீஸ்வரர் ஆகியுள்ளது.

nigeria 4 month baby becomes influencer millionaire

நைஜீரியாவில் பிறந்த 4 மாத குழந்தை தானாகவே பெரும் கோடீஸ்வரர் ஆகியுள்ளதாக அவரின் தாய் தெரிவித்துள்ளார்.

நைஜீரியா லவுராய்கிஜி  என்ற பெண் எழுத்தாளர், தொழிலதிபர், சமூக ஊடக நிபுணர் என பன்முகத்தன்மை கொண்ட கோடீஸ்வரர் ஆவார்.இவருக்கு நான்கு மாதங்களுக்கு முன்னர் லவுரல் என்ற மகள் பிறந்தார்.

இந்நிலையில், லவுரல் தானாகவே தனது திறமையை கொண்டு கோடீஸ்வரர் ஆகிவிட்டார் என்ற ஆச்சரிய தகவலை அவரின் தாய் லவுரா வெளியிட்டுள்ளார். அதாவது இன்ஸ்டாகிராம் இனுபுலியன்சர்  மூலமே குழந்தை கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.

இது குறித்து லவுரா தனது பதிவில், இன்ஸ்டாகிராமில் அதற்குள் மிக பிரபலமாகி என் மகள் கோடீஸ்வரர் ஆகி தூதர் ஒப்பந்தத்தை பெற்றுள்ளார். என்னையே அதற்குள் அவர் முந்தி விடுவார் போல் இருக்கிறது, இந்த வயதிலேயே பெரிய வேலை தான் என பதிவிட்டுள்ளார்.

அதாவது லவுரா இன்ஸ்டாகிராமில் மிக பிரபலம் ஆவார், அவரின் மகள் புகைப்படங்களை வைத்து செய்யப்படும் விளம்பரங்களும் அதிகளவில் பகிரப்படும் நிலையிலேயே இந்த அதிர்ஷ்டம் அவருக்கு அடித்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Nigeria 4 month baby becomes influencer millionaire | World News.