15 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அதிசயம்!.. பூமிக்கு 'மிக அருகில்' வரும் செவ்வாய்!.. என்ன நடக்கப்போகிறது?.. வெளியான 'அதிர்ச்சி' தகவல்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manishankar | Oct 13, 2020 08:27 PM

விண்வெளியில் 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அரிய நிகழ்வு நாளை (புதன்கிழமை) வானில் நடைபெற உள்ளது. இதில் பூமி, செவ்வாய் மற்றும் சூரியன் ஆகியவை ஒரே நேர் கோட்டில் சந்திக்க உள்ளது.

mars to be visible at its biggest coming very near to earth

பூமிக்கும், செவ்வாய் கிரகத்துக்கும் இடையிலான அதிகபட்ச தூரம் 40 கோடியே 13 லட்சம் கி.மீ தொலைவு ஆகும். இதில் நீள் வட்ட பாதை பயணத்தில் மிக அருகில் செவ்வாய் கிரகம் வரும்போது, இரு கிரகங்களுக்கும் இடையிலான தூரம் 6 கோடியே 20 லட்சம் கி.மீ. தொலைவாக இருக்கும்.

இந்த நீள்வட்ட பாதை தொலைவு காரணமாகவே பூமி ஒருமுறை சூரியனை சுற்றி வர 365 நாட்களும், செவ்வாய் கிரகம் சூரியனை சுற்றி வர 687 நாட்களும் ஆகிறது.

இதனால், விரைவாக சூரியனை சுற்றி வரும் பூமி 26 மாதங்களுக்கு ஒரு முறை செவ்வாய் கிரகத்தை அருகில் சந்திக்கிறது. இதில், அமீரக நேரப்படி நாளை (புதன்கிழமை) அதிகாலை சுமார் 3.20 மணிக்கு செவ்வாய் கிரகம் வானில் பிரகாசமாக தோன்றும். நாளை பூமி, செவ்வாய் மற்றும் சூரியன் ஆகியவை ஒரே நேர் கோட்டில் சந்திக்கும் அரிய வானியல் நிகழ்வு ஏற்படுகிறது.

அதன் பிறகு 15 ஆண்டுகள் கழித்தே இந்த அரிய நிகழ்வு நடைபெறும். எந்த கிரகமும் சூரியனுக்கு நேர் எதிரில் வரும்போது பூமிக்கு மிக நெருக்கமான இடத்தை அடைவது இயல்புதான். அந்த வகையில், நாம் தொலைநோக்கி மூலம் பார்க்கும்போது செவ்வாய் கிரகம் இன்னும் பெரிதாகவும், பிரகாசமாகவும், அருகிலும் தெரியும்.

இந்த ஆண்டு, இறுதிவரை வானில் செவ்வாய் கிரகத்தை காணலாம். மிக பிரகாசமாக பார்க்க வேண்டுமானால் இம்மாத இறுதிவரை காணலாம். நாட்கள் கடந்து செல்ல செல்ல தொலைவும் அதிகரிப்பதால், பிரகாசமும், அளவும் பார்ப்பதற்கு குறையும்.

பொதுமக்கள் சூரிய மறைவுக்கு பிறகு வெறும் கண்ணால் செவ்வாய் கிரகத்தை பார்க்கலாம். சூரியன் மேற்கில் மறைந்தவுடன் கிழக்கு மற்றும் தென்கிழக்கு திசைக்கு இடையே அரை மணி நேரம் பார்க்கலாம். பல வாரங்களுக்கு இதுபோல வானில் இந்த காட்சி தோன்றும்.

நள்ளிரவு நேரமாக இருந்தால் நமது தலைக்கு மேலே காணலாம். காலை நேரத்தில் மேற்கு மற்றும் தென்மேற்கு திசையில் செவ்வாய் கிரகத்தை பார்க்கலாம். வெறும் கண்ணால் பார்க்கும்போது புள்ளியாக ஆரஞ்சு நிறத்தில் பிரகாசமாக தெரியும். அமீரகத்தில் செவ்வாய் கிரகம் குறித்த ஆய்வில் ஈடுபடுவோர் மற்றும் வானியல் நிபுணர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Mars to be visible at its biggest coming very near to earth | World News.