விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிராக ஸ்கெட்ச்!.. இலங்கை அரசுக்கு உதவியதா இங்கிலாந்து பாதுகாப்பு நிறுவனம்?.. வெளியான பகீர் தகவல்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Behindwoods News Bureau | Dec 01, 2020 07:17 PM

இலங்கையில் 1980-களில் அந்த நாட்டு அரசுக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இடையிலான சண்டையில் இங்கிலாந்து பாதுகாப்பு நிறுவனத்தின் பங்கு குறித்து ஸ்காட்லாந்து யார்டு போர்க்குற்ற குழு விசாரணையை தொடங்கியுள்ளது.

ltte scotland yard police probe role of british mercenaries in fight

விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஒடுக்க இலங்கையின் சிறப்பு போலீஸ் படைக்கு இங்கிலாந்தின் கே.எம்.எஸ். என்ற தனியார் பாதுகாப்பு நிறுவனம் பயிற்சி வழங்கியதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து கடந்த மார்ச் மாதத்தில் ஒரு பரிந்துரை கிடைத்ததாகவும் அது தற்போது விசாரணையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் ஸ்காட்லாந்து யார்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளிவந்த இங்கிலாந்தை சேர்ந்த புலனாய்வு பத்திரிகையாளர் பில் மில்லர் எழுதிய புத்தகத்தில் இலங்கை உள்நாட்டுப் போரில் கே.எம்.எஸ். பாதுகாப்பு நிறுவனத்தின் போர்க்குற்றங்கள் குறித்து குறிப்புகள் இருந்தன. இதுவே ஸ்காட்லாந்து யார்டு போர்க்குற்ற குழுவின் விசாரணைக்கு வித்திட்டது.

            

இதுகுறித்து பில் மில்லர் கூறுகையில் “இந்த போலீஸ் விசாரணையை நான் வரவேற்கிறேன். இது நீண்ட கால தாமதமாகும். கே.எம்.எஸ்.க்கு எதிரான பெரும்பாலான சான்றுகள் இங்கிலாந்து வெளியுறவு அலுவலக கோப்புகளில் 30 ஆண்டுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கையின் கொந்தளிப்பான வரலாற்றில் இந்த இங்கிலாந்து நிறுவனத்தின் பங்கு எந்த அளவிற்கு உள்ளது என்றும் கேட்க நிறைய கேள்விகள் உள்ளன” என்றார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Ltte scotland yard police probe role of british mercenaries in fight | World News.