100 ஆண்டுகளில் 'முதல்முறையாக' மூடப்பட்ட எல்லைகள்... 2-ம் அலையின் 'தொடக்கத்தால்' அதிரடி முடிவெடுத்த நாடு!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manjula | Jul 07, 2020 06:46 PM

100 ஆண்டுகளில் முதன்முறையாக இரண்டு மாகாணங்களுக்கு இடையேயான எல்லைகள் மூடப்பட்டு இருக்கின்றன.

COVID-19: Australia Closes State Border For First Time In 100 Years

உலகம் முழுவதும் அச்சுறுத்தும் கொரோனாவுக்கு ஆஸ்திரேலிய நாடும் விதிவிலக்கல்ல. கடுமையான ஊரடங்கு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக மே மாத இறுதியில் அங்கு கொரோனா 75% கட்டுக்குள் வந்தது. ஆனால் 10 நாட்களுக்கு முன்னர் அங்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டு மக்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் மீண்டும் அங்கு கொரோனா வெகுவேகமாக பரவி வருகிறது. குறிப்பாக ஆஸ்திரேலியாவின் 2-வது பெரிய நகரமான மெல்போர்னில் கொரோனா உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த சில நாட்களாக நாளொன்றுக்கு 109 தொற்றுகள் கண்டறியப்பட்டு வருகின்றது. இதனால் 2-வது அலை உருவாகக்கூடும் என்ற அச்சத்தில் அடுத்த 6 வாரங்களுக்கு அங்கே கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இதேபோல மற்றொரு பெரிய மாகாணமான ஆஸ்திரேலியாவிலும் கொரோனா வேகமாக பரவுவதால், கடந்த 100 ஆண்டுகளில் முதன்முறையாக மெல்போர்ன், விக்டோரியா மாகாண எல்லைகள் மூடப்பட்டு இருக்கின்றன. இதற்கு முன் 1919-ம் ஆண்டு ஸ்பானிஷ் காய்ச்சலின் போது இரண்டு மாகாண எல்லைகளும் மூடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,755 ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 106 ஆகவும் உள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. COVID-19: Australia Closes State Border For First Time In 100 Years | World News.