"சீனா நகர்த்தும் காய்களை இந்தியா முறியடிக்குமா?".. சத்தமின்றி பாகிஸ்தானில் வேலையைத் தொடங்கிய சீன அரசு!.. அதிர்ச்சியூட்டும் செயற்கைக்கோள் படங்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manishankar | Jun 03, 2020 04:29 PM

பாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்தில் சீனா தனது கடற்படை தளத்தை வேகமாக வலுப்படுத்தி வருகிறது என்பதை சமீபத்திய செயற்கைக்கோள் படங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.

china strengthens its harbour at Gwadar in pak amid standoff

இந்திய லடாக் எல்லையில் இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கு இடையே, கடந்த மாதம் முதல் வாரத்தில் கைகலப்பும், மோதலும் ஏற்பட்டதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்தில் சீனா தனது கடற்படை தளத்தை வேகமாக வலுப்படுத்துகிறது என்பதை சமீபத்திய செயற்கைக்கோள் படங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

பாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்தில் சீனாவால் புதிய கட்டமைப்புகள் கட்டப்பட்டு வருவதாக செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. சீனா அதன் கடற்படையை வலுப்படுத்தி பயன்படுத்துவதற்காக அந்த பகுதியை மேலும் மேம்படுத்துவதில் ஈடுபட்டுள்ளது. இந்திய பாதுகாப்பு நிபுணர்களின் கூற்றுப்படி, குவாடர் துறைமுகத்தை நவீனமயமாக்குவதிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை மிக விரைவாக அபிவிருத்தி செய்வதிலும் கடற்படை தளமாக பயன்படுத்துவதில் சீனா ஈடுபட்டுள்ளது.

46 பில்லியன் அமெரிக்க டாலர் சீனா-பாகிஸ்தான் பொருளாதார தாழ்வாரத்தின் ஒரு பகுதியாக இருக்கும் குவாடர் துறைமுகத்தின் வளர்ச்சி, சீனாவிற்கு மூலோபாய மற்றும் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். இதனை பொருட்களின் போக்குவரத்துக்கு பயன்படுத்த விரும்புகிறது, இதனால் சீனா நீண்ட கடல் வழியைச் சார்ந்து இருக்க வேண்டியதன் அவசியத்தைக் குறைக்கிறது.

குவாடர் துறைமுகம் வழியாக சீனா இந்தியப் பெருங்கடலில் தனது இருப்பை அதிகரித்து வருகிறது என்பதில் வியப்பேதுமில்லை. குவாடர் துறைமுகத்தை சீனா ஒரு கடற்படை தளமாகவும், தேவைப்படும்போது இந்தியாவின் வளர்ந்து வரும் கடல் வலிமையைக் கட்டுப்படுத்த ஒரு தளமாகவும் பயன்படுத்த முடியும் என்ற கவலையை இது ஏற்படுத்தியுள்ளது.

எனினும், பாகிஸ்தானில் உள்ள இந்த தாழ்வாரத்தில் சீனா மேற்கொண்டு வரும் கட்டுமானப் பணிகளுக்கும் பெரும் எதிர்ப்பு உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, எந்தவொரு எதிர்ப்பு மற்றும் சாத்தியமான தாக்குதலின் போதும் தனது மக்களைப் பாதுகாக்க சீனா குவாடர் துறைமுகத்தைச் சுற்றி ஒரு உயர் பாதுகாப்பு வளாகத்தை உருவாக்கி வருகிறது.

நூற்றுக்கணக்கான சீன பொறியியலாளர்கள் தற்போது குவாடர் மற்றும் கராச்சி துறைமுகங்களைச் சுற்றி கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பகுதிகளில் உள்ள பலூச்சி மக்கள் பாகிஸ்தானிலிருந்து சுதந்திரத்திற்காக போராடுகிறார்கள் என்பதையும், அதன் ஆயுதப் படைகள் இந்த மக்களின் இயக்கத்தை நசுக்குகின்றன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பாகிஸ்தான் அரசு தனது இராணுவத்தை சிபிஇசி தாழ்வாரத்தின் பாதுகாப்பிற்காகவும், குவாடரை வளர்ப்பதில் ஈடுபட்டுள்ள சீனா கம்யூனிகேஷன்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியின் (சிசிசிசி லிமிடெட்) பொறியாளர்கள் மற்றும் பணியாளர்களை பாதுகாக்கவும் நிறுத்தியுள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. China strengthens its harbour at Gwadar in pak amid standoff | World News.