‘இதனால தான் அப்படி பண்ணேன்’.. மனைவி மரண வழக்கில் கணவர் பரபரப்பு வாக்குமூலம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Jun 02, 2022 07:02 PM

மனைவியின் மரண வழக்கில் கணவர் கொடுத்த வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tirunelveli man arrested for stabbed his wife to death

Also Read | தகாத உறவை கண்டித்த தம்பி.. ஆத்திரத்தில் ஆள் வைத்து ‘அக்கா’ செஞ்ச காரியம்.. பரபரக்க வைத்த சம்பவம்..!

திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே உள்ள தெற்கு வாகைகுளத்தை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவரது மனைவி ராமலட்சுமி. இந்த தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கல்யாணசுந்தரம் குடும்பத்துடன் திருப்பூரில் வசித்து வந்தார். இவர் அங்கு ஒர்க்‌ஷாப் வைத்து நடத்தி வந்தார். ராமலெட்சுமி அப்பகுதியில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

கடந்த மாதம் 13-ம் தேதி குடும்ப பிரச்சினை காரணமாக ராமலெட்சுமி தனது குழந்தைகளுடன் தெற்கு வாகைகுளத்தில் உள்ள தனது தந்தை பாலகிருஷ்ணன் வீட்டுக்கு வந்துவிட்டார். இந்த சூழலில் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த ராமலட்சுமியை அவரது கணவர் கல்யாண சுந்தரம் சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளார். இதில் படுகாயமடைந்த ராமலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை அடுத்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு தலைமறைவாக இருந்த கல்யாணசுந்தரத்தை தேடி வந்தனர்.  இந்த சூழலில், நேற்று மானூர் அழகிய மண்டபம் அருகே பதுங்கி இருந்த கல்யாணசுந்தரத்தை போலீசார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

அதில், தனது மனைவி அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டிருந்ததை கல்யாணசுந்தரம் கண்டித்துள்ளார். ஆனால் இதை கண்டுகொள்ளாத ராமலட்சுமி, யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் பாட்டுகளுக்கு நடனம் ஆடி பதிவிட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலில் கடந்த மாதம் இதேபோல் ஏற்பட்ட சண்டையில், குழந்தைகளை அழைத்துக் கொண்டு ராமலட்சுமி அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார். இதில் ஆத்திரமடைந்த கல்யாணசுந்தரம், மனைவியை அரிவாளால் தாக்கியதாக போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதனை அடுத்து கல்யாணசுந்தரம் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர்.

Also Read | கன்னியாகுமரி அருகே கல்யாணத்துக்கு முன் ‘ஷாக்’ கொடுத்த மணப்பெண்.. உடனே மணமகன் வீட்டார் எடுத்த ‘அதிரடி’ முடிவு..!

Tags : #TIRUNELVELI #MAN #ARREST #WIFE #மனைவி #கணவர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Tirunelveli man arrested for stabbed his wife to death | Tamil Nadu News.