'சென்னைக்குள்' இ-பாஸ் தேவையா? 'திங்கள்' கிழமையில் இருந்து 'சென்னை இப்படிதான்' இருக்கும்! வெளியான 'அறிவிப்பு'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Jul 04, 2020 10:20 PM

சென்னையில் 6-ஆம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சென்னையில் போக்குவரத்து தொடர்பான சில விளக்கங்கள் போக்குவரத்து கூடுதல் ஆணையர் கண்ணன் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தின் பிறகு தெரிவிக்கப்பட்டுள்ளது.

this is how chennai will be from july 6th monday

அதன்படி சென்னை உள்ளே வாகனங்கள், ஆட்டோக்கள், கால் டாக்ஸி முதலானவை திங்கள்கிழமை முதல் இயங்கலாம் என்றும் சென்னை மண்டலம் உள்ளே இயங்குவதற்கு இ பாஸ் எதுவும் தேவையில்லை என்றும் கண்ணன் தெரிவித்துள்ளார். மேலும் சென்னையில் திங்கள்கிழமை முதல் சிக்னல்கள் இயங்கும் என்று தெரிவித்த அவர் போலி இ-பாஸ் பற்றி தகவல் கிடைக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

முன்னதாக ஜூலை 6-ஆம் தேதி முதல் சென்னையில் அமலுக்கு வர உள்ள தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார். அதன்படி சென்னை பகுதிகளில் இயங்கும் உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கலாம் என்றும் அதேசமயம் பார்சல் சேவை மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இதேபோல் தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பார்சலுக்கு மட்டுமான அனுமதியுடன் இயங்கும் என்றும் தெரிவித்துள்ளார். காய்கறி கடைகள் மற்றும் மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. This is how chennai will be from july 6th monday | Tamil Nadu News.