'இந்த சால்வை'.. கண்கலங்கிய... 'முன்னாள்' கலெக்டர் ரோகிணி .. நெஞ்சை உருக்கும் பேச்சு.. வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Jun 30, 2019 04:13 PM
சமீபத்தில் தலைமைச் செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதன் ஓய்வு பெறுவதற்கு முன்னாள், அதிரடியாக பல்வேறு மாவட்ட ஆட்சியர்களை இடம் மாற்றினார்.

இதில், சேலம் கலெக்டர் ரோகினியும் பணியிட மாற்றம் செய்யப்பட்டதோடு, பதவி மாற்றமும் செய்யப்பட்டார். அதன்படி தற்போது தமிழ்நாடு இசைப் பல்கலைக் கழக பதிவாளராக ரோகினி பதவியேற்றுள்ளார்.
இதனையொட்டி கலெக்டர் ரோகினிக்கு பிரிவு உபசார விழா நடந்தது. இதில் விவசாயிகள் உட்பட, சேலம் கலெக்டராக இருந்த ரோகினியால் பயனடைந்தோர் பலரும் அவருக்கு சால்வை போற்றினர்.
இதனால் நெகிழ்ந்து நன்றி சொல்லி பேசியபோது ரோகினி மெலிதாக கண்கலங்கியதும், அவரது பேச்சும் அனைவரிடையே ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியது.
Tags : #IAS #ROHINI #VIDEO VIRAL #SELAM
