'8-ம் வகுப்பு வரை ஆல் பாஸ்'... பள்ளி கல்வித்துறை அதிரடி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Apr 09, 2019 06:55 PM

8-ம் வகுப்பு வரை மாணவர்களை தோல்வி அடையச் செய்யக் கூடாது என அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும், பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

school education circular send to schools no fails till 8th standard

இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் 8-ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களை தோல்வி அடைய செய்யக்கூடாது என்ற உத்தரவு அமலில் இருந்தது. இதில் திருத்தம் கொண்டு வந்த மத்திய அரசு 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும் முறையை அறிமுகப்படுத்தியது.

இந்தப் புதிய உத்தரவு குறித்து தமிழக அரசு அறிவிப்பு எதுவும் வெளியிடாத நிலையில், 8-ம் வகுப்பு வரை மாணவர்களை தேர்வில் தோல்வி அடைய செய்யக்கூடாது என்று பள்ளிகளுக்கு, பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்த உத்தரவை  மீறும் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 9-ம் வகுப்பில் தோல்வி அடையும் மாணவர்கள் ஜூன் 3-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை உடனடித் தேர்வு எழுத நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #SCHOOL #EDUCATION #GOV #EXAMS