'ரஜினிகாந்த் இ-பாஸ் வாங்கினார்'... 'இ-பாஸில் குறிப்பிடப்பட்டிருந்த காரணம்'... மாநகராட்சி விளக்கம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Jul 23, 2020 04:41 PM

ரஜினிகாந்த் இ-பாஸ் வாங்கினாரா இல்லையா, என்ற சர்ச்சை நிலவி வந்த நிலையில், தற்போது மாநகராட்சி அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

Rajinikanth obtained an e-pass to travel to his Kelambakkam farmhouse

கொரோனா ஊரடங்கு காரணமாக ஒரு மாவட்டத்திலிருந்து மற்ற மாவட்டத்திற்குச் செல்ல இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும். இதனை ஆன்லைனில் பதிவு செய்து பெற்றுக்கொள்ள முடியும். மருத்துவ மற்றும் அவசர தேவைகளுக்கு மட்டுமே இ-பாஸ் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரஜினிகாந்த் அண்மையில் சென்னையிலிருந்து கேளம்பாக்கத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றிருந்தார். ரஜினி காரை ஓட்டி செல்லும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியானது. இதையடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கேளம்பாக்கத்திற்கு செல்ல ரஜினிகாந்த் இ-பாஸ் வாங்கினாரா என பலரும் கேள்வி எழுப்பி இருந்தார்கள்.

Rajinikanth obtained an e-pass to travel to his Kelambakkam farmhouse

இதுதொடர்பாக பேசிய மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், இந்த சம்பவம் குறித்து விசாரித்து பதில் அளிக்கப்படும் என தெரிவித்திருந்தார். அதன்படி இந்த விவகாரத்தில் மாநகராட்சி தற்போது விளக்கமளித்துள்ளது. அதில் ரஜினிகாந்த் இ-பாஸ் பெற்றுத்தான் கேளம்பாக்கம் சென்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நெருங்கிய உறவினர் இறப்பு, திருமணம் உள்ளிட்ட முக்கிய தேவைகளுக்காக மட்டுமே இ-பாஸ் வழங்கப்படும் நிலையில், ரஜினிக்கு எதன் அடிப்படையில் இ-பாஸ் வழங்கப்பட்டது என்ற தகவல் வெளியிடப்படவில்லை. இருப்பினும் மருத்துவ அவசரத்திற்காக என இ-பாஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Rajinikanth obtained an e-pass to travel to his Kelambakkam farmhouse | Tamil Nadu News.