தரையை தோண்டிக் கொண்டிருந்த நாய்.. "என்னடான்னு பக்கத்துல போய் பாத்தா.." மறுகணமே பதறியடித்த பெண்.. கிராமத்தை அதிர வைத்த சம்பவம்

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith Kumar V | Feb 01, 2022 07:15 PM

பட்டுக்கோட்டை : வயல் ஒன்றில் நாய் ஒன்று தரையைத் தோண்டிக் கொண்டிருக்க, அதனை அருகே சென்று பார்த்த பெண்ணிற்கு அதிர்ச்சி காத்திருந்தது.

pattukottai woman body found police start investigation

அன்னைக்கி ரெயில்வே ஸ்டேஷன்'ல பிச்சை எடுக்கும் நிலைமை.. இன்னைக்கி அவங்க லெவலே வேற.. திரும்பி பார்க்க வைத்த இளம்பெண்

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே அமைந்துள்ளது சூரப்பள்ளம் என்னும் கிராமம் . அந்த பகுதியில், பெரிய ஏரி ஒன்றின் மேல்கரை அருகே, பெண் ஒருவர் தென்னந்தோப்பில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்துள்ளார்.

இந்த சமயத்தில், பக்கத்து வயலில் வந்த நாய் ஒன்று, தரையைத் தோண்டிக் கொண்டே இருந்துள்ளது.

பதறிய பெண்

இதனைக் கண்ட அந்த பெண், சந்தேகத்தின் பெயரில் அருகே சென்று பார்த்துள்ளார். அப்போது, தான் கண்ட காட்சியால், அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார், ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண். ஏதோ உடல் ஒன்று, அந்த இடத்தில் புதைக்கப்பட்டதைக் கண்டு பதறிப் போன அவர், இது பற்றி கிராம மக்களிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

pattukottai woman body found police start investigation

போலீசார் விசாரணை

தொடர்ந்து, அப்பகுதி விஏஓ சரவணுனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த சரவணன், அந்த உடலைக் கொன்று புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில், பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். பிறகு, சம்பவ இடத்திற்கு போலீசாரும் உடனடியாக வந்துள்ளனர்.

முதற்கட்ட தகவல்

இரவு நேரம் ஆகி விட்டது என கூறப்படும் நிலையில், இன்று காலை உடல் தோண்டி எடுக்கப்பட்டு, அங்கேயே உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் பிறகு, அந்த பெண்ணின் உடலை வைத்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அது யார் என்பது பற்றிய சில தகவல்கள் தெரிய வந்துள்ளது.

pattukottai woman body found police start investigation

கடும் அதிர்ச்சி

பட்டுக்கோட்டையை அடுத்த திட்டக்குடி தெருவை சேர்ந்த இளங்கோவன் என்பவரின் மனைவி அன்னபூரணி (வயது 52) தான் என்பது உறுதியானது கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல், கடந்த சில தினங்களுக்கு முன், வீட்டை விட்டு கோபித்துக் கொண்டு, அன்னபூரணி வெளியேறி சென்றுள்ளார் என்றும் கூறப்படுகிறது. வீட்டிலிருந்து வெளியேறிய அன்னபூரணி, தற்போது உடலாக மீட்கப்பட்டுள்ளது, அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு கோணத்தில் விசாரணை

குடும்ப பிரச்சனை காரணமாக, வெளியேறிய அன்னபூரணியை அதே பிரச்சனை காரணமாக யாரவது கொலை செய்தர்களா, அல்லது நகைக்காக வேண்டி கொலை செய்தனரா, அல்லது இது எதுவும் இல்லாத வேறு ஒரு காரணம் இருக்குமா என்ற பல்வேறு கோணத்திலும், போலீசார் தற்போது விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

வரலாறு படைக்க போகும் இந்திய அணி.. எந்த அணியும் தொடாத உயரம்.. எல்லாம் ரோஹித் கேப்டன் ஆன நேரம் போல

Tags : #PATTUKOTTAI #WOMAN BODY FOUND #POLICE START INVESTIGATION #பட்டுக்கோட்டை #போலீசார் விசாரணை

மற்ற செய்திகள்