தளர்வு அறிவித்த 'ஒரே நாளில்' அப்ளை பண்ணிய 1.2 லட்சம் பேருக்கு 'இ-பாஸ்!'.. 'மகிழ்ச்சியில்' திளைத்த விண்ணப்பதாரர்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Aug 18, 2020 11:10 AM

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் இ-பாஸ் முறை அமலுக்கு வந்தது.

nearly 1.2 lakh people got epass for district to district travel

இதன்படி ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு, ஒரு மாநிலத்தில் இருந்து வேறொரு மாநிலத்திற்கு செல்வதற்கு இ-பாஸ் அவசியம் என்ற கட்டுப்பாடு பின்பற்றப்பட்டது. இதனையடுத்து தற்போது இந்த நடைமுறையை மத்திய அரசு ரத்து செய்துள்ள போதிலும் மாநிலங்களில் ஆங்காங்கே இ-பாஸ் நடைமுறை சில தளர்வுகளுடன் பின்பற்றப்பட்டு வந்தது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மண்டலம் விட்டு மண்டலம் போக இ-பாஸ் அவசியம் என்கிற நிலை மாறி, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்கிற கடுமையான விதி தொடரப்பட்டது.

இறப்பு , மருத்துவ சிகிச்சை, திருமணம் உள்ளிட்ட அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டுமே அளிக்கப்பட்டு வந்த இ-பாஸ் மற்ற காரணங்களுக்காக கிடைக்காத நிலை நீடித்து வந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியதாக கோரிக்கை எழுந்ததையடுத்து ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் செல்போன் எண்ணை இணைத்து விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் தாமதமின்றி உடனடியாக இ-பாஸ் வழங்கப்படும் என்றும் அதேசமயம் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து தவிர்க்க இயலாத பயணங்களுக்கு மட்டும் பயணிகள் விண்ணப்பம் செய்து இப-பாஸ் பெற்றுக்கொண்டு பயணம் செய்யுமாறும் என்றும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மிக அண்மையில் அறிவித்தார்.

இதனை அடுத்து இ-பாஸ் நடைமுறை தளர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது. அதுமட்டுமல்லாமல் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் தானியங்கி முறையில் இ-பாஸ் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் விண்ணப்பிக்கும் அனைவருக்குமே இ-பாஸ் என்கிற சூழல் உண்டான உடன் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு ஒரே நாளில் 1.20 லட்சம் பேர் விண்ணப்பித்து இ-பாஸ் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Nearly 1.2 lakh people got epass for district to district travel | Tamil Nadu News.