”பொங்கல் பெருமை.. ஜல்லிக்கட்டு வீரம்” - ‘தமிழ்நாடு’ என குறிப்பிட்டு ஆளுநர் வெளியிட்ட பொங்கல் வாழ்த்து!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By K Sivasankar | Jan 14, 2023 10:11 PM

ஆளுநர் ஆர்.என்.ரவி , “தமிழ் மக்களின் பெருமையை பறைசாற்றும் பண்டிகை பொங்கல்” என குறிப்பிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கையில் ‘தமிழ்நாடு ஆளுநர்’ என கூறியிருப்பது வைரல் ஆகியுள்ளது. 

governor RN Ravi mentioned Tamilnadu in his pongal wishes

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொங்கல் என்பது நம் தமிழ் மக்களின் பெருமையை பறைசாற்றும் பண்டிகை, பல்லாயிரம் ஆண்டுகால  கலாசாரம், பாரம்பரியத்தை பொங்கல் திருவிழாவாகக் கொண்டாடுகிறோம். நமது வீரத்தை ‘ஜல்லிக்கட்டு’ விழாவாக இந்த நாளில் கொண்டாடுகிறோம். இந்த அறுவடை திருநாளில் எங்கிருந்தாலும், எல்லா கிராமங்களிலும், சூரிய கடவுள் மற்றும் நம் விருப்ப தெய்வங்களை கைகூப்பி வணங்கி பொங்கலோ பொங்கல் என முழக்கமிட்டு மரியாதை செலுத்துவோம்.” என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தமிழ்நாடு என சொல்வதை விட தமிழகம் எனச் சொல்வது சரியாக இருக்கும் என்று ஆளுநர் ரவி குறிப்பிட்ட விவகாரம் தமிழகத்தில் பல்வேறு கட்சிகளிடையே பல எதிர் கருத்துக்களை உருவாக்கியது. இந்நிலையில் ஆளுநர் மாளிகையில் இருந்து இன்ற வெளியாகியுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தி குறிப்பில் ‘தமிழ்நாடு ஆளுநர் என்று குறிப்பிடப்பட்டுள்ள விஷயம் கவனம்  பெற்றுள்ளது.

குறிப்பாக “பொங்கல் திருநாளில் நமது வீரத்தை ஜல்லிக்கட்டு விழாவாக கொண்டாடுகிறோம்” என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ள விஷயம் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களிடையே கவனம் பெற்றுள்ளது.

Tags : #தமிழ்நாடு #ஆளுநர் ரவி #தமிழ்நாடு ஆளுநர் #பொங்கல் #வாழ்த்து #PONGAL 2023 #RN RAVI #GOVERNOR RN RAVI #TN GOVERNOR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Governor RN Ravi mentioned Tamilnadu in his pongal wishes | Tamil Nadu News.