தனியாலாம் என்னால 'குழந்தையை' சமாளிக்க முடியாது...! குழந்தை அழுது கொண்டிருந்ததால் எரிச்சலில் தந்தை செய்த காரியம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Feb 09, 2020 07:11 PM

8 மாத பெண் கைக்குழந்தையை பேருந்து நிலையத்தில் குடிபோதையில் இருந்த தந்தையே பேரம் பேசி விற்க முயற்சி செய்த சம்பவம் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Father trying to sell an 8-month-old baby at the bus station

திருச்சி மாவட்டம், லால்குடியை சேர்ந்தவர் ராஜதுரை.  சித்ரா, பேச்சியம்மாள் ஆகிய இரு மனைவிகளுடன் ராஜதுரை திருப்பூரில் வேலை செய்து வருகிறார். குடிப்பழக்கத்தால் அவர்களது குடும்ப வாழ்வில் அடிக்கடி பிரச்சனைகள் வந்துகொண்டே இருந்தது.

ராஜதுரையின்  இரண்டாவது மனைவி பேச்சியம்மாளுக்கு, ஒரு கட்டத்தில் அவரது அட்டூழியத்தை தாங்க முடியாமல் போனது. ஆகவே பேச்சியம்மாள் தன்னுடைய 8 மாத பெண் குழந்தையை கணவரிடமே விட்டுவிட்டு சொந்த ஊரான நெல்லைக்கு சென்றுள்ளார்.

பேச்சியம்மாள் இல்லாமல் குழந்தையை சமாளிக்க முடியாத ராஜதுரை மது குடித்துவிட்டு,  குழந்தையை தூக்கி கொண்டு அவரும் நெல்லைக்கு சென்றுள்ளார். பேருந்தில் மது போதையில் தள்ளாடிய அவரை நடத்துனர் பாதி வழியில் திருமங்கலம் பேருந்தில் இறக்கிவிட்டுள்ளனர். குழந்தையும் விடாமல் அழுது கொண்டே இருந்ததால் எரிச்சலடைந்த ராஜதுரை, பேருந்து நிலையத்தில் குழந்தையை கூவிக்கூவி விற்க முயன்றுள்ளார்.

இந்த சம்பவத்தை கண்ட அருகிலிருந்த பொதுமக்களில் சிலர் திருமங்கலம் நகர காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து ராஜதுரையை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் விசாரித்த காவல்துறையினர், பேச்சியம்மாளை வரவழைத்து குழந்தையை தாயிடம் சேர்த்து அறிவுரை கூறி அனுப்பிவைத்தனர்.

Tags : #BUSSTAND