3 மணி நேரமா 'தண்ணி'ல கெடக்குது.. பரபரத்த மக்கள்.. 'கடைசி'ல நடந்தது தான் ஹைலைட்டே!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith Kumar V | Jan 16, 2022 04:58 PM

திண்டுக்கல் : ஓடை நீர் ஒன்றில், சுமார் 3 மணி நேரமாக ஒருவரின் உடல் கிடப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், கடைசியில் மொத்த சம்பவமும் தலை கீழாக மாறிப் போயுள்ளது.

dindugal drunk man in water for three hours recovered alive

திண்டுக்கல் மாவட்டம், சீலப்பாடி என்னும் பகுதி அருகே, ஓடை பாலம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பாலத்தின் அடியில், சுமார் 3 மணி நேரமாக, உடல் ஒன்று மிதந்ததாக பொது மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், தீயணைப்புத்துறை மற்றும் காவல் துறை, அங்கு வந்து சம்மந்தப்பட்ட உடலை மீட்க முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர்.

உச்சகட்ட பரபரப்பு

அப்போது, யாரும் எதிர்பார்க்காத வகையில், திடீரென அந்த நபர் எழுந்து வந்ததால், அங்கிருந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து, இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அந்த நபரின் பெயர் முருகவேல் என்பது தெரிய வந்தது. அது மட்டுமில்லாமல், இன்னும் சில பரபரப்பு தகவல்களும், முருகவேல் குறித்து வெளியானது.

தலைக்கேறிய போதை

திண்டுக்கல் மாவட்டம், ஆலகுவார் பட்டியைச் சேர்ந்த முருகவேல், தனியார் மில் ஒன்றில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை வீட்டை விட்டு வெளியே வந்த முருகவேல், கள்ளச்சந்தை மூலம், மது வாங்கி அருந்தியதாகவும் தெரிகிறது. அத்துடன், அந்த ஓடைப் பாலத்தின் அருகே அமரவும் செய்துள்ளார். போதை தலைக்கேறியதன் காரணமாக, நிலைத் தடுமாறி விழுந்துள்ளார் முருகவேல்.

மீட்க வந்த போலீசார்

அது மட்டுமில்லாமல், பாதை முழுவதும் தண்ணீர் இருப்பதாக நினைத்துக் கொண்டே, ஓடை பாலத்தில், நிரம்பியிருந்த நீரில், நீந்திய படி, உள்ளே சென்றதாகவும் கூறப்படுகிறது. சுமார் மூன்று மணி நேரமாக, முருகவேல் நீரில் மிதந்ததாக கூறப்படும் நிலையில், அங்கு வந்த பொது மக்கள், பாலத்தின் அடியில் உடல் ஒன்று கிடப்பதாக, போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

யார் அவர்?

அதன் பிறகு, தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அங்கு வந்த அவர்கள், மீட்பு பணிகளில் ஈடுபட முயன்ற போது, பெரும் சத்தம் ஒன்றுடன், தண்ணீரில் நீந்திய படியே, இறந்ததாக கருதப்பட்ட உடல், எட்டிப் பார்த்ததாக கூறப்படுகிறது.

இதனைக் கண்டதும் அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் பொது மக்கள், ஒரு நிமிடம் பதறிப் போயினர். இதனைத் தொடர்ந்து, அவரை மீட்ட அதிகாரிகள், அவரிடம் இருந்த அடையாள அட்டையை வைத்து, அவர் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொண்டனர். தொடர்ந்து, முருகவேலின் உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மருத்துவ பரிசோதனை

தண்ணீரில் நீண்ட நேரம் இருந்ததால், மருத்துவ பரிசோதனைக்காக வேண்டி, முருகவேலை போலீஸ் அதிகாரிகள், மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.

போதையின் காரணமாக, ஒருவர் இறந்ததாக கருதப்பட்ட நிலையில், அவர் திடீரென மீண்டு வந்தது, அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : #DINDUGAL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Dindugal drunk man in water for three hours recovered alive | Tamil Nadu News.