ஆக்ரோஷத்தில் கோலி சொன்ன வார்த்தை.. மைக்கில் பதிவான ஆடியோ.. "என்னங்க இப்டி பேசி வெச்சுருக்காரு??"

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith Kumar V | Jan 23, 2022 11:06 PM

தென்னாப்பிரிக்க வீரரைப் பார்த்து ஆக்ரோஷத்தில் விராட் கோலி கூறிய வார்த்தை, மைக்கில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Virat kohli aggressive send off to bavuma after his run out

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில், தென்னாப்பிரிக்க அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3 - 0 என்ற கணக்கில் தொடரைக் வென்றுள்ளது.

டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர் என இரண்டையும் இழந்துள்ள  இந்திய அணி, இன்றைய போட்டியில் அருகே சென்று வெற்றி வாய்ப்பை தவற விட்டது.

டி காக் சதம்

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கே எல் ராகுல், பந்து வீச்சைத் தேர்வு செய்தார். தொடர்ந்து ஆடிய தென்னாபிரிக்க அணியின் தொடக்க வீரர் டி காக், சிறப்பாக ஆடி 124 ரன்கள் எடுத்திருந்தார். இவரைத் தவிர, வெண்டர் டுசன் 52 ரன்கள் எடுத்திருந்தார்.

சாஹர் அதிரடி

49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தென்னாப்பிரிக்க அணி, 287 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து, ஆடிய இந்திய அணியில் தவான் 61 ரன்களும், கோலி 65 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.  மீண்டும் ஒரு முறை இந்திய அணியின் மிடில் ஆர்டர் வரிசை சொதப்ப, கடைசி கட்டத்தில் தீபக் சாஹர் அதிரடி காட்டினார். இதனால், தோல்வி அடையும் கட்டத்தில் இருந்த இந்திய அணி, வெற்றிப் பாதைக்கு திரும்பியது.

த்ரில் வெற்றி

34 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன், 54 ரன்களை விளாசினார் தீபக் சாஹர். ஆனால், அவர் அவுட்டானதும் போட்டி மீண்டும் மாறியது. கடைசி 2 ஓவர்களுக்கு இந்திய அணியின் வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட, கைவசம் 2 விக்கெட்டுகள் இருந்தது.மேற்கொண்டு 3 ரன்கள் மட்டுமே சேர்த்த இந்திய அணி, இரண்டு விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதனால், தென்னாப்பிரிக்க அணி த்ரில் வெற்றி பெற்று அசத்தியது.

சிறப்பான ஃபீல்டிங்

இதனிடையே, இந்த போட்டியில், தென்னாப்பிரிக்க வீரர் ஒருவர் அவுட் ஆகும் போது, கோலி கூறிய வார்த்தை மைக்கில் பதிவாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, 7 ஆவது ஓவரை தீபக் சாஹர் வீசினார். அப்போது பந்தை எதிர்கொண்ட பாவுமா, அதனை மிட் ஆஃப் திசையில் அடித்தார். உடனடியாக, பாவுமா சிங்கிள் ஓட, அப்பகுதியில் ஃபீல்டிங் நின்ற ராகுல், மிக துல்லியமாக பாவுமாவை ரன் அவுட் செய்தார்.

ஆக்ரோஷமான கோலி

இதனால், அதிர்ஷ்டம் இல்லாத பாவுமா, 8 ரன்களில் அவுட்டாகி நடையைக் கட்ட, அவரின் விக்கெட்டை இந்திய வீரர்கள் கொண்டாடினர். அப்போது, விராட் கோலி, பாவுமாவை நோக்கி, "பீல்டிங்கில் எங்களை மிகவும் லேசாக எண்ணி விட்டாயா?" என ஹிந்தியில் ஆவேசமாக கூறினார். அது மட்டுமில்லாமல், ஹிந்தியில் மேலும் ஏதோ மோசமான வார்த்தை ஒன்றையும், கோலி மைதானத்தில் பயன்படுத்தியுள்ளார். ஸ்டம்ப் மைக்கில் இந்த ஆடியோ பதிவாக, இது தொடர்பான வீடியோக்கள் தற்போது வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

அதிர்ச்சி

மைதானத்தில் அதிகம் ஆக்ரோஷமாக காணப்படும் கோலி, கடந்த இரண்டு போட்டிகளிலும், பாவுமாவுடன் சண்டையில் ஈடுபட்டிருந்தார்.

இதனிடையே, ராகுலின் சிறப்பான ஃபீல்டிங்கால் பாவுமா அவுட்டாக, ஆக்ரோஷத்தில் கோலி தெரிவித்த கருத்து, ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #VIRATKOHLI #KLRAHUL #DEEPAK CHAHAR #BAVUMA #விராட் கோலி #தீபக் சாஹர் #பாவுமா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Virat kohli aggressive send off to bavuma after his run out | Sports News.