'போட்றா வெடிய' இன்னும் ஒரே வாரத்துல... ரசிகர்களுக்கு 'நற்செய்தி' சொன்ன ஐபிஎல் தலைவர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Jul 21, 2020 06:49 PM

கொரோனா காரணமாக இந்த வருடம் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டிகள் தள்ளி போய்க்கொண்டே இருக்கிறது. இப்படியே போனால் இந்த வருடமே அடுத்த 5 மாதங்களில் முடிந்து விடும் என்பதால் போட்டிகளை ரசிகர்கள் இன்றி வெளிநாடுகளில் நடத்திட பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது.

IPL 2020 most likely in the UAE says Brijesh Patel

இந்த நிலையில் ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல், ''இன்னும் 7 முதல் 10 நாள்களில் ஐபிஎல் நிர்வாக குழு கூட்டம் நடைபெறும். அதில் ஐபிஎல் அட்டவணை குறித்து ஆலோசனை செய்யப்படும்,'' என தெரிவித்து இருக்கிறார். மேலும் இதுதொடர்பாக மத்திய அரசு அனுமதியை கேட்டு இருப்பதாகவும் தெரிவித்த அவர், ரசிகர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இருக்காது.

செப்டம்பர் வரை கொரோனாவை கண்காணித்து விட்டு போட்டி குறித்த இறுதி முடிவை எடுப்போம் என நம்பிக்கை வார்த்தைகளை தெரிவித்துள்ளார். அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற இருந்த ஐசிசி டி20 உலகக்கோப்பை அடுத்த வருடத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதால் ஐபிஎல் பணிகள் தற்போது வேகமெடுத்து வருகின்றன.

அநேகமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் ஐபிஎல் போட்டிகள் நடைபெறலாம் என கூறப்படுகிறது. ஐபிஎல் போட்டிகள் நடைபெறாமல் போனால் 4000 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. IPL 2020 most likely in the UAE says Brijesh Patel | Sports News.