‘நீங்க வேணும்னா பாருங்க...’ ‘அவங்க தான் நெறைய விக்கெட் எடுக்க போறாங்க...’ - கிரவுண்ட்-ஐ வைத்து கணிக்கும் ஆகாஷ் சோப்ரா...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Issac | Apr 09, 2021 11:03 PM

தற்போது நடைபெறவிருக்கும் 2021-ஆம் ஆண்டின் ஐபில் போட்டியில் சூர்யகுமார் யாதவ் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரை குறித்து புகழ்ந்து கூறியுள்ளார் முன்னாள் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா.

Akash Chopra says spinners will eventually take more wickets

அவர் தனது யூடியூப் சேனலில் பகிரப்பட்ட வீடியோவில் கூறியதாவது, 'தற்போது நடைபெறவிருக்கும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியில் சூர்யகுமார் யாதவ் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் விராட் கோலி மற்றும் க்ளென் மேக்ஸ்வெல் ஆகியோரை விஞ்சிவிடுவார் என நினைக்கிறேன்.

மேலும் ஆகாஷ் சோப்ரா, சூர்யகுமார் யாதவ் மற்றும் ரோஹித் சர்மா போன்ற மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் விராட் கோலி-க்ளென் மேக்ஸ்வெல் ஜோடியை ரன்-ஸ்கோரிங் அடிப்படையில் முறியடிப்பார்கள்.

Akash Chopra says spinners will eventually take more wickets

அதுமட்டுமில்லாமல் வேகப்பந்து வீச்சாளர்களை விட சுழற்பந்து வீச்சாளர்கள் அதிக விக்கெட்டுகளை எடுப்பார்கள். இருந்தாலும் சுழற்பந்து வீச்சாளர்களை விட,  வேகப்பந்து வீச்சாளர்கள் தான் அதிகமாக விளையாடுவார்கள்.

என்னதான் இருந்தாலும் கடைசியில் நான் சொன்ன சுழற்பந்து வீச்சாளர்கள் இறுதியில் அதிக விக்கெட்டுகளை எடுப்பார்கள். இப்போது நடைபெறும் போட்டியின் மைதானம் பெரிது என்பதால் நிறைய பேட்ஸ்மேன்கள் சிக்கிக் கொள்வதை நான் தொடர்ந்து பார்க்கிறேன்' என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Akash Chopra says spinners will eventually take more wickets | Sports News.