RCB டீம்ல இவ்ளோ பெரிய மிஸ்டேக் இருக்கே.. இதை யாராவது கவனச்சீங்களா.. தவறை சுட்டிக்கட்டிய ஆகாஷ் சோப்ரா..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Feb 18, 2022 05:16 PM

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் மிகப்பெரிய தவறு இருப்பதாக ஆகாஷ் சோப்ரா சுட்டிக்காட்டியுள்ளார்.

Aakash Chopra points out major weakness in RCB squad

காதல் திருமணம் செய்த மூத்த மகள்.. மனவேதனையில் இருந்த தந்தை செய்த காரியம்.. அதிர்ச்சியில் உறைந்த கிராமம்..!

ஐபிஎல் 2022

ஐபிஎல் தொடரின் 15-வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் சில தினங்களுக்கு முன்பு பெங்களூரில் நடைபெற்றது. இதில் ஒவ்வொரு அணியும் வீரர்களை போட்டி போட்டு ஏலத்தில் எடுத்தனர். குறிப்பாக ராயல் சேலஞ்ர்ஸ் பெங்களூரு அணி சிஎஸ்கே அணியில் விளையாடிய டு பிளசிஸ், ஜேசன் ஹசில்வுட் உள்ளிட்ட முன்னணி வீரர்களை எடுத்தது. அதேபோல் கொல்கத்தா அணியில் விளையாடி வந்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கை பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

ஆர்சிபி

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடருடன் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகியுள்ளார். அதனால் தற்போது ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ள டு பிளசிஸ் அல்லது தினேஷ் கார்த்திக் பெங்களூரு அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆகாஷ் சோப்ரா

இந்த நிலையில் பெங்களூரு அணியின் ஆடும் லெவனில் தவறு இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா சுட்டிக்காட்டியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ‘தொடக்க வீரர்களாக டு பிளசிஸ், விராட் கோலி உள்ளனர். முதல் விக்கெட்டிற்கு மேக்ஸ்வெல் உள்ளார். ஆனால் 4-வது வீரராக அணியில் நம்பிக்கையான பேட்ஸ்மேன் யார் இருக்கிறார்? மீண்டும் மிடில் ஆர்டரில் பிரச்சினையில்தான் ஆர்சிபி சிக்கியிருக்கிறது. 5-வது இடத்திற்கு கூட தினேஷ் கார்த்திக்கை வைத்துக்கொள்ளலாம். ஆனால் அவரின் ஃபார்மே சற்று மோசமாக உள்ளதால் மிடில் ஆர்டர் பலவீனமாகவே இருக்கும்.

 Aakash Chopra points out major weakness in RCB squad

மிடில் ஆர்டர்

ஆர்சிபியில் செர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் இருக்கிறார். அவரை ப்ளேயிங் 11-ல் சேர்க்க முடிந்தால் மிடில் ஆர்டரில் பிரச்சினை இல்லை. ஆனால் அவரை சேர்ப்பது கடினமான ஒன்று. ஏனென்றால் அதிகபட்சமாக 4 வெளிநாட்டு வீரர்கள் தான் இருக்க வேண்டும். டு பிளசிஸ், மேக்ஸ்வெல், செர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் என 3 பேர் பேட்டிங்கிற்கு உதவினால் பவுலிங்கிற்கும் 2 வெளிநாட்டு வீரர்கள் கட்டாயமாக தேவை என்ற சூழலில் ஆர்சிபி இருக்கிறது.

சுழற்பந்து வீச்சு

அதேவேளையில் அணியில் தரமான இந்திய ஸ்பின்னர்கள் இல்லை. கார்ன் ஷர்மா மட்டுமே இருக்கிறார். இவரும் நம்பிக்கை தரும்படி இல்லாததால் இலங்கை சுழ்ற்பந்து வீச்சாளர் ஹசரங்கா மீது நம்பிக்கை வைத்து அதிக தொகைக்கு எடுத்துள்ளனர். அதனால் அவரை ப்ளேயிங் 11-ல் ஆட வைக்க வேண்டிய நிர்பந்தம் உள்ளது.

பந்துவீச்சு சிக்கல்

ஒருவேளை ஹசரங்காவை 4-வது வெளிநாட்டு வீரராக சேர்த்தால், வேகப்பந்து வீச்சில் இந்திய வீரர்களை பயன்படுத்தியாக வேண்டும். தற்போது ஹர்ஷல் பட்டேல், முகமது சிராஜ் உள்ளனர். 3-வது பவுலராக ஆட வைக்க முன்னணி வேகப்பந்துவீச்சாளர் ஜோஸ் ஹசல்வுட் இருக்கிறார். இதனால் ரூதர்ஃபோர்ட்டை களமிறக்கினால், ஜோஸ் ஹசல்வுட் அல்லது ஹசரங்கா இல்லாமல் பந்துவீச்சு பலவீனமாகும். ஒருவேளை ரூதர்ஃபோர்டை உட்காரவைத்தால், மிடில் ஆர்டரில் பேட்டிங் பெரிதும் பாதிக்கப்படும். இப்படி பேட்டிங், சுழற்பந்து வீச்சு, வேகப்பந்து வீச்சு என சிறந்த இந்திய வீரர்கள் இல்லாததால் ஆர்சிபி பெரும் சிக்கலில் உள்ளது’ என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

காலேஜ் முடிஞ்சி ஹாஸ்டல் போனபோது இடையில் நடந்த விபரீதம்.. கன்னியாஸ்திரிக்கு நேர்ந்த சோகம்..!

Tags : #AAKASH CHOPRA #MAJOR WEAKNESS #RCB SQUAD #IPL 2022 #ஆகாஷ் சோப்ரா #ராயல் சேலஞ்சர்ஸ் #ஐபிஎல் 2022 #ஆர்சிபி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Aakash Chopra points out major weakness in RCB squad | Sports News.