'மாட்டு கறி'யா விக்கிற'... 'முஸ்லிம் பெண்ணிற்கு நிகந்த கொடூரம்' ... பதைபதைக்க வைக்கும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | May 25, 2019 02:37 PM

மாட்டுக் கறி வைத்திருந்ததாகக் கூறி பெண் உட்பட 2ஆண்களை மரத்தில் கட்டி வைத்து அடித்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Woman Among 3 Thrashed Over Beef Rumour In Madhya Pradesh

மத்திய பிரதேச மாநிலம்  போபால் நகரில் ஆட்டோவில் ஒரு பெண்ணும் 2 ஆண்களும் சென்று கொண்டிருந்தார்கள்.அப்போது அவர்களை மறிந்த ஒரு கும்பல் மாட்டு இறைச்சி வைத்திருப்பதாக கூறி, அவர்களை மரத்தில் கட்டி போட்டு செருப்பினால் அடித்துள்ளனனர்.அவர்களை அடிக்கும் போது,'ஜெய் ஸ்ரீ ராம்' என கோஷம் போட்டவாரே அடித்துள்ளனர்.சம்பம் நடந்த போது அங்கிருந்த ஒருவர் அதனை வீடியோ எடுத்துள்ளார்.ஆனால் அவர் இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை.

இதனிடையே மே 22 அன்று இந்த சம்பவம் நடந்துள்ளது.அதற்கு மறுநாள் ராம் சேனா அமைப்பில் உறுப்பினராக இருக்கும் சுபம் சிங் என்பவர் இந்த வீடியோவை ஃபேஸ் புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பின்னர் அந்த வீடியோவை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார்.இதனிடையே இந்த சம்பவத்தில் தொடர்புடைய 5 பேரினை காவல்துறை கைது செய்துள்ளது.

Tags : #BEEF RUMOUR #MADHYA PRADESH #BHOPAL #THRASHED