இறந்த ஷ்ரத்தாவின் சடலத்துடன் பேசிக் கொண்டிருந்த அஃப்தாப் ? நடு நடுங்க வைக்கும் காரியம்!!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith Kumar V | Nov 17, 2022 10:42 PM

டெல்லியில் ஷ்ரத்தா என்ற இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அடுத்தடுத்து பல்வேறு தகவல்களும் வெளிவந்த வண்ணம் உள்ளது. அதே போல, குற்றவாளி அஃப்தாப் குறித்த பல்வேறு தகவல்கள் தொடர்ந்து பீதியை தான் உருவாக்கி வருகிறது.

shraddha aftab case ஷ்ரத்தா அஃப்தாப் வழக்கு விவகாரம்

டெல்லியில் தனது காதலருடன் இணைந்து வாழ்ந்து வந்த இளம்பெண் ஷ்ரத்தா திடீரென நீண்ட நாளாக காணாமல் போயுள்ளார்.

அப்படி ஒரு சூழலில் இது குறித்து ஷ்ரத்தாவின் குடும்பத்தினர் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தனர். இதனைத் தொடர்ந்து, ஷ்ரத்தாவுடன் லிவிங் டுகெதர் ரிலேஷனில் இருந்து வந்த அவரது காதலர் அஃப்தாப்பை போலீசார் விசாரித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. ஷ்ரத்தா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அஃப்தாப்பை அடிக்கடி வற்புறுத்தியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த அஃப்தாப், ஷ்ரத்தாவை கொலை செய்து அவருடைய உடலை 35 பாகங்களாக வெட்டி, ஃபிரிட்ஜில் வைத்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமும் இரவு 2 மணியளவில் உடல் பாகங்களை எடுத்துச் சென்று டெல்லியின் பல்வேறு பகுதிகளில் அஃப்தாப் வீசியதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து, காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடர்ந்து வந்தனர். அமீன் மீது IPC 302 (கொலை), 201 (தடயங்களை அழிக்க முயற்சித்தல்) ஆகிய பிரிவுகளின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

shraddha aftab case ஷ்ரத்தா அஃப்தாப் வழக்கு விவகாரம்

கடந்த மே மாதமே ஷ்ரத்தா கொலை செய்யப்பட்டிருந்த நிலையில், நீண்ட நாட்களாக அவர் யாருடனும் தொடர்பில் இல்லாமல் போனதன் சந்தேகத்தில் தான் சமீபத்தில் அஃப்தாப் விசாரணை வளையத்தில் வந்தார். ஆரம்பத்தில் சண்டை போட்டு விட்டு வீட்டில் இருந்து வெளியேறிய ஷ்ரத்தாவை அதன் பின்னர் பார்க்கவே இல்லை என போலீசாரிடம் அஃப்தாப் தெரிவித்திருந்த நிலையில், அதன் பின்னர் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டது மற்றும் ஷ்ரத்தா இன்ஸ்டாகிராம் கணக்கு ஆக்டிவாக இருந்ததன் பெயரில் தான் அஃப்தாப் சிக்கி கொலை செய்ததையும் ஒப்புக் கொண்டிருந்தார்.

அப்படி ஒரு சூழலில், ஷ்ரத்தா கொலை வழக்கு தொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இதனிடையே, ஷ்ரத்தாவின் உடல் பாகங்களை அஃப்தாப் எங்கே வீசினார் என்பதை அறிந்து அதனை மீட்டும் வருகின்றனர் போலீசார். இதனிடையே ஷ்ரத்தா உடல் பாகங்கள் வீட்டில் இருந்த சமயத்தில் அஃப்தாப் செய்து வந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ள தகவல், திடுக்கிட வைத்துள்ளது.

ஷ்ரத்தாவை கொன்ற பிறகு அவரது உடலை ஃப்ரிட்ஜ் ஒன்றை புதிதாக வாங்கி அதற்குள் வைத்திருந்தார் அஃப்தாப். அதே போல, ஷ்ரத்தா உடல் வீட்டில் இருக்கும் போதே வேறொரு பெண்ணை வீட்டிற்கு அஃப்தாப் அழைத்து வந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.

shraddha aftab case ஷ்ரத்தா அஃப்தாப் வழக்கு விவகாரம்

அதே போல, ஷ்ரத்தாவின் தலை பகுதி வீட்டில் இருக்கும் போது அதனுடன் அஃப்தாப் பேசிக் கொண்டிருந்ததாகவும் கோபம் வரும் சமயத்தில் அதனை அறையவும் அடிக்கவும் செய்வார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும், கடைசி வரை துண்டிக்கப்பட்ட தலை மற்றும் சில பாகங்கள் ஃப்ரிட்ஜில் இருந்த நிலையில், அதனை கடைசியில் தான் அஃப்தாப் வெளியே கொண்டு போய் வீசினார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

இறந்த பிறகும், ஷ்ரத்தாவின் தலை பகுதியை கொண்டு அஃப்தாப் செய்து வந்த விஷயம், பீதியை உண்டு பண்ணி உள்ளது.

Tags : #AFTAB #SHRADDHA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Shraddha aftab case ஷ்ரத்தா அஃப்தாப் வழக்கு விவகாரம் | India News.