'தலைமுடிய புடிச்சு இழுத்து'...'என்ன அசிங்கப்படுத்தி'...'முன்னாள் முதல்வர் மீது மருமகள்' பரபரப்பு புகார்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Dec 16, 2019 04:07 PM

வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பு, தனது மாமியாரும் பீகார் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி, தன்னை அடித்து துன்புறுத்தியதாக அவரது மருமகள் ஐஸ்வர்யா ராய் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

Rabri Devi pulled my hair, assaulted me, Aishwarya Rai files FIR

லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவுக்கும் ஐஸ்வர்யா ராய் என்பவருக்கும் கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் நடந்தது. திருமணம் ஆனதில் இருந்து கணவனின் குடும்பத்தினர் தன்னை துன்புறுத்துவதாக  கூறி ஐஸ்வர்யா ராய் விவாகரத்து கேட்டிருந்தார். இதனையடுத்து கணவனின் வீட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு முன் தன்னை அடித்து, தலைமுடியால் இழுத்து ராப்ரிதேவி தாக்கியதாக ஐஸ்வர்யா ராய் புகார் அளித்துள்ளார்.

அதோடு தனது குடும்பத்தினர் குறித்து அவதூறான சுவரொட்டிகளை பாட்னா பல்கலைக்கழக வளாகத்தில் கணவர் தேஜ் பிரதாப் யாதவின் ஆதரவாளர்கள் ஒட்டினார்கள். அதுகுறித்து தனது மாமியாரிடம் முறையிட்டதற்கு, ராப்ரி தேவி தன்னை கடுமையாக தாக்கியதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் ராப்ரி தேவியுடன் இருக்கும் பெண் பாதுகாவலரும் சேர்ந்து தன்னை தாக்கினார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வீட்டில் நடந்த சம்பவங்களை வீடியோ எடுக்க முயன்றபோது தனது செல்போனை பறித்து தாக்கியதாகவும் ஐஸ்வர்யா ராய் தனது புகார் மனுவில் கூறியுள்ளார்.

Tags : #FIR #RABRI DEVI #AISHWARYA RAI #LALU #TEJ PRATAP YADAV #PATNA #DIVORCE CASE