வரலாற்றிலேயே முதல்முறை.. நாகாலாந்து சட்டமன்ற தேர்தலில் வெற்றி மகுடம் சூடிய இரு பெண்கள்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | Mar 03, 2023 10:11 AM

நாகாலாந்து சட்டமன்ற தேர்தலில் வரலாற்றிலேயே முதன்முறையாக இரு பெண்கள் தேர்தலில் வெற்றிபெற்று உள்ளனர். இது அம்மாநில மக்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Nagaland assembly election 2 women candidates won for first time

                                  Images are subject to © copyright to their respective owners.

Also Read | களைகட்ட இருக்கும் ஐபிஎல்.. சென்னை வந்தார் CSK கேப்டன் MS தோனி.. வீடியோ.!

தேர்தல்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, திரிபுரா மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களுக்கு அண்மையில் தேர்தல் நடந்து முடிந்தன. திரிபுராவில் கடந்த மாதம் 16 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. மேகாலயா மற்றும் நாகாலாந்தில் கடந்த மாதம் 27 ஆம் தேதி தேர்தல் நடந்தது.

நாகாலாந்து மாநிலத்தை பொறுத்தவரையில் மொத்தம் 60 தொகுதிகள் உள்ளன. இதில் பாஜக. ஒரு இடத்தில் போட்டியின்றி வெற்றி பெற்றது. இதனால் 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. ஆளும் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி (NDPP) இந்த முறையும் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்தது. இதில் NTPP 40 தொகுதியிலும் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிட்டன. இதில் பாஜக கூட்டணி வெற்றிபெற்று இருக்கிறது.

Nagaland assembly election 2 women candidates won for first time

Images are subject to © copyright to their respective owners.

முதன்முறையாக

இந்த சூழ்நிலையில் முதன்முறையாக நாகாலாந்து மாநிலத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் இரு பெண்கள் தேர்வாகியுள்ளனர். மேற்கு அங்கமி தொகுதியில் போட்டியிட்டு சல்ஹூதுவோனுவோ க்ரூஸ் வெற்றி பெற்றிருக்கிறார். அதேபோல ஹெகானி ஜகாலு திமாபூர் மூன்றாம் தொகுதியில் வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறார்.

நாகலாந்து தனிமாநிலமாக உருவான பிறகு இதுவரை நடந்த சட்டமன்ற தேர்தல்களில் பெண் வேட்பாளர்கள் வெற்றிபெற்றது கிடையாது. இந்த சூழ்நிலையில் சல்ஹூதுவோனுவோ க்ரூஸ் மற்றும் ஹெகானி ஜகாலு வெற்றிபெற்று வரலாற்றை மாற்றி எழுதியிருக்கின்றனர்.

Nagaland assembly election 2 women candidates won for first time

Images are subject to © copyright to their respective owners.

சல்ஹூதுவோனுவோ க்ரூஸ்

உள்ளூரில் ஹோட்டல் உரிமையாளரான க்ரூஸ், மேற்கு அங்கமி தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் ஒருவரை எதிர்த்து போட்டியிட்டார். அவருக்காக அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவும், நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோவும் க்ரூஸுக்காக பிரச்சாரம் செய்தனர். ஜகாலு டெல்லி பல்கலைக்கழக பட்டதாரி மற்றும் அங்கு ஆசிரியராக உள்ளார்.

ஹெகானி ஜகாலு

அமெரிக்காவில் படித்த வழக்கறிஞரான ஜகாலு, சமூக தொழில்முனைவோர் மற்றும் யூத்நெட்டின் நிறுவனர் ஆவார். சர்வதேச மகளிர் தினத்தன்று ராஷ்டிரபதி பவனில் இந்திய ஜனாதிபதியிடமிருந்து நாரி சக்தி புரஸ்கார் விருதையும் பெற்றுள்ளார். இளைஞர் மேம்பாடு, பெண்கள் அதிகாரமளித்தல், சிறுபான்மையினர் உரிமைகள் ஆகியவற்றுக்காக செயல்பட இருப்பதாக ஜகாலு தெரிவித்திருக்கிறார்.

Also Read | தனது எனர்ஜி டிரிங்கை ரசிகர் கையில் கொடுத்து அழகு பார்த்த சிராஜ்.. வைரலாகும் வீடியோ!!

Tags : #NAGALAND #NAGALAND ASSEMBLY ELECTION

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Nagaland assembly election 2 women candidates won for first time | India News.