'என்ன யாருன்னு தெரியுதா'?... 'கதவை திறந்ததும் ஒரு நிமிடம் ஆடிப்போன தாய்'... 45 வருடம் கழித்து நடந்த ஆச்சரியம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Aug 02, 2021 09:07 AM

ஒரு தாய்க்கு இதைவிடப் பெரிய சந்தோசம் வேறு எதுவும் இருக்க முடியாது என்பதை நிரூபிக்கும் அளவில் நடந்துள்ளது இந்த சம்பவம்.

Kerala man, believed dead in plane crash, is reunited with family

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சஜ்ஜத் டங்கல். இவர் தன்னுடைய 25 வயதில், கலாச்சார நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நடிகை ராணி சந்திரா குழுவுடன் கடந்த 1976-ஆம் ஆண்டு, ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி சென்றுள்ளார்.அதன் பின் அங்கிருந்து விமானம் மூலம் திரும்பிய போது, மும்பையில் ஏற்பட்ட விமான விபத்தில் நடிகை ராணி சந்திரா உட்பட 95 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் சஜ்ஜத் டங்கலும் உயிரிழந்துவிட்டதாக குடும்பத்தினர் எண்ணியுள்ளனர். ஆனால் சஜ்ஜத் ஒரு சில காரணங்களால் அந்த விமானத்தில் பயணிக்காமல் மும்பையிலே இருந்துள்ளார். இந்த விபத்தைக் கேள்விப்பட்ட அவர், மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டதால், மும்பையிலே தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.

Kerala man, believed dead in plane crash, is reunited with family

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அறிந்த தொண்டு நிறுவனம் ஒன்று அவரை குடும்பத்தினருடன் நேற்று முன் தினம் சேர்த்து வைத்தது. 45 வருடங்களாகத் தனது மகன் இறந்து விட்டார் எனத் தினம் தினம் துயரத்திலிருந்த சஜ்ஜத் டங்கலின் தாய் பாத்திமா பீவி(91), மகன் உயிரோடு வருவதைக் கண்டு, இன்ப அதிர்ச்சியில் கண்கலங்கி அவரை கட்டியணைத்தார். இதே போன்று குடும்பத்தினரும் அவரை கண்கலங்கிய நிலையில் வரவேற்றனர்.

Kerala man, believed dead in plane crash, is reunited with family

அவரது 91 வயது தாய் பாத்திமா பீவி இந்த சம்பவம் குறித்து, "இறந்ததாகக் கருதப்பட்ட மகன் 45 ஆண்டுகளுக்குப் பின் உயிருடன் வந்தது எனது இத்தனை வருடச் சோகத்தை ஒரே நொடியில் தீர்த்து விட்டது,” என கண்ணீர் மல்கக் கூறினார்.

Tags : #KERALA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Kerala man, believed dead in plane crash, is reunited with family | India News.