நிர்பயா வழக்கு: குற்றவாளிகளுக்கு 'தூக்குத்தண்டனை' விதித்த நீதிபதி... 'அதிரடி' இடமாற்றம்... என்ன நடந்தது?

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Jan 23, 2020 06:08 PM

நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவை பிறப்பித்த டெல்லி கீழமை நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் அரோரா உச்ச நீதிமன்றத்தின் கூடுதல் பதிவாளராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

Judge\'s workplace change in Nirbhaya case-apex court order

தலைநகர் டெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் வழக்கில் முகேஷ் குமார் சிங் (32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அக்‌ஷய் குமார் சிங் (31) ஆகிய 4 குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

குற்றவாளிகள் 4 பேரையும் பிப்ரவரி 1-ம் தேதி காலை 6 மணிக்கு திகார் சிறையில் தூக்கில் போட வேண்டும் என விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதி சதீஷ்குமார் அரோராவின் இந்த தீர்ப்பை அடுத்து, 4 பேரையும் தூக்கில் போடுவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில்,  டெல்லி கீழமை நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் அரோரா உச்ச நீதிமன்றத்தின் கூடுதல் பதிவாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார் என டெல்லி நீதிமன்ற பதிவாளர் தெரிவித்துள்ளார்.

Tags : #SUPREME COURT #NIRBHAYA CASE #SATISH KUMAR ARORA #TRANSFER