இனி 'இந்த' சிகரெட் நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு தரும்; தடை விதித்து மத்திய அரசு அதிரடி!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Sep 18, 2019 05:27 PM

இந்தியா முழுவதும் இ-சிகரெட் உற்பத்தி செய்வது, அதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது அல்லது பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் இந்தியாவிற்கு இ-சிகரெட்டினை இறக்குமதி செய்வதுமான செயல்பாடுகள் முற்றும் முழுக்க, இந்தியாவில் தடை செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

e-cigarette is banned in india, Says Nirmala Sitharaman

மேலும், இதற்கான அவசர சட்ட வரைவினை, ஏற்றுக்கொள்வதற்கான ஒப்புதலை மத்திய அரசு உடனடியாக வழங்கியுள்ளதாகவும், தொடர்ந்து இ-சிகரெட்டை விநியோகப்படுத்துவதற்கான நோக்கில், அதனை விளம்பரப் படுத்தும் நடவடிக்கைக்கும் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இ-சிகரெட்டைப் பயன்படுத்துவதால் மூளை வளர்ச்சியில் தடை ஏற்படுவதாகவும், கற்றல் திறன் பாதிக்கப்படுவதாகவும், அதுமட்டுமல்லாமல், மன அழுத்தம் மற்றும் பதற்றம் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டதை அடுத்து மத்திய அரசு இதற்கு தடை விதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #NIRMALASITHARAMAN #CIGARETTES #ECIGARETTES