மேக்கப் போட்ட மணப்பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்.. கல்யாணத்தையே நிறுத்திய மாப்பிள்ளை..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | Mar 06, 2023 09:25 PM

கர்நாடக மாநிலத்தில் மேக்கப் போட்டதால் மணமகளின் முகம் பாதிக்கப்பட்ட நிலையில், திருமணத்தையே மாப்பிள்ளை நிறுத்தியிருக்கிறார். இது அப்பகுதி முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து காவல்துறையிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Bride face disfigured during makeup groom calls off wedding

                           Images are subject to © copyright to their respective owners.

Also Read | அணியில் சேர்க்காததால் கோபப்பட்ட உமேஷ் யாதவ்.. மனம் திறந்து பேசிய முன்னாள் பயிற்சியாளர் பரத் அருண்..!

"எல்லோரும் விட்டுட்டு போய்ட்டாங்க.. மருத்துவ செலவுக்கு உதவி பண்ணுங்க".. பல படங்களை தயாரித்த VA துரை கண்ணீருடன் கோரிக்கை..!

மேக்கப்

கல்யாணம் என்பதே பல்வேறு சடங்குகளை உள்ளடக்கியது. வரன் பார்ப்பது துவங்கி, அடுத்தடுத்து ஏகப்பட்ட வேலைகள் அணிவகுத்து நிற்கும். சமீப ஆண்டுகளில் திருமணத்தை ஒட்டி பல்வேறு புதிய புதிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அவற்றுள் முக்கியமானது மேக்கப். விதவிதமான பேக்கஜ்களில் தற்போது மேக்கப் போடப்பட்டு வருகின்றன. தங்களது சருமத்திற்கும் பட்ஜெட்டிற்கும் உகந்த வகையில் மணப்பெண்கள் தங்களுக்கான மேக்கப்பை தேர்வு செய்துகொள்கின்றனர். ஆனால், கர்நாடகாவில் மேக்கப் போடும்போது ஏற்பட்ட தவறால் திருமணமே நின்று போயிருக்கிறது.

Bride face disfigured during makeup groom calls off wedding

Images are subject to © copyright to their respective owners.

திருமணம்

கர்நாடக மாநிலம், ஹசன் மாவட்டத்தில் உள்ள அரசிகிரி கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. இருவீட்டாரின் சம்மதப்படி திருமண தேதி குறிக்கப்பட்ட நிலையில் கல்யாண வேலைகள் தடபுடலாக நடைபெற்று வந்திருக்கின்றன. இந்த சூழ்நிலையில், திருமணத்திற்கு முன்னர் மேக்கப் போட முடிவெடுத்திருக்கிறார் மணமகள். இதனை தொடர்ந்து, அதே பகுதியில் இயங்கி வரும் பியூட்டி பார்லருக்கு சென்றிருக்கிறார் மணப்பெண்.

அதிர்ச்சி

திருமணத்திற்காக மேக்கப் போட வேண்டும் என மணமகள் கூறிய நிலையில், புதிதாக ஒரு மேக்கப் இருப்பதாகவும் அதனை பயன்படுத்தலாமா? எனவும் அந்த பியூட்டி பார்லர் உரிமையாளர் கேட்டதாக தெரிகிறது. அதற்கு மணமகளும் ஓகே சொல்லியிருக்கிறார். மேக்கப் போட்ட கொஞ்ச நேரத்தில் முகத்தில் நீராவியை பட செய்திருக்கிறார் உரிமையாளர். அப்போது. அவருடைய முகம் முழுவதும் சிவந்து போயிருப்பதை கண்ட மணப்பெண் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.

Bride face disfigured during makeup groom calls off wedding

Images are subject to © copyright to their respective owners.

கொஞ்ச நேரத்தில் முகம் எல்லாம் வீங்கவே, உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார் அந்த பெண். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மேக்கப் போடும்போது ஏற்பட்ட அலர்ஜியே இதற்கு காரணம் என தெரிவித்திருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் மேலும் அதிர்ச்சி தரக்கூடிய விதத்தில் மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தையே நிறுத்தியிருக்கின்றனர்.

புகார்

மணப்பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், மாப்பிள்ளை வீட்டாரும் திருமணத்தை நிறுத்தியதால் மணமகள் வீட்டினர் பெரும் சோகமடைந்துள்ளனர். இதனிடையே, காவல்துறையில் இதுகுறித்து மணப்பெண்ணின் குடும்பத்தினர் புகார் அளித்திருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் பியூட்டி பார்லர் உரிமையாளர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.

Also Read | விமானத்தின் கழிவறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கிலோ தங்க கட்டிகள்.. அதிகாரிகள் தீவிர விசாரணை..!

Tags : #KARNATAKA #BRIDE #MAKE UP #GROOM #WEDDING

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Bride face disfigured during makeup groom calls off wedding | India News.