''கேவலம் இந்த கொரோனாவுக்காக....'' - 'பாண்டியன் ஸ்டோர்' முல்லை பகிர்ந்த ஃபோட்டோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக நான்காவது முறையாக வருகிற மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழக தலைநகர்  சென்னையில் மக்கள் கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து தமிழக அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Vijay Tv Pandian Store Chitra shares a photo about coronavirus goes viral | கொரோனா வைரஸ் குறித்து ஃபோட்டோ பகிர்ந்த பாண்டியன் ஸ்டோர் சித்ரா

அதன் ஒரு பகுதியாக பிரபலங்களும் மக்களுக்காக விழிப்புணர்வு பதிவுகளை எழுதி வருகின்றனர். இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர் தொலைக்காட்சி தொடரில் முல்லையாக ரசிகர்களை கவர்ந்த சித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாஸ்க் அணிந்த படி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில், ''கேவலம் இந்த கொரோனாக்காக எல்லாம் இந்த சூனா பானா மாஸ்க் போட வேண்டியதா போச்சு'' என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து ரசிகர்களை அதனை பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக ரசிகர்களுக்கு பரீட்சையமான சித்ரா, தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்' சீரியலில் முல்லை என்ற வேடத்தில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். இதனையடுத்து அவரது படங்கள் தொடர்ந்து வைரலாகி வருகிறது.

Entertainment sub editor