பிரபல தமிழ் ஹீரோயினின் கணவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இந்தியாவில் ஊரடங்கு வருகிற மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதனையடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் மிகக் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

Shriya Saran's husband turned away from hospital despite Covid-19 symptoms | ஸ்ரேயாவின் கணவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி

கொரோனாவின் பாதிப்பில் இருந்து எளிய மக்கள் முதல் பிரபலங்கள் வரை யாரும் தப்பவில்லை. இது மக்களிடையே ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தினாலும் கொரோனாவில் இருந்து மக்கள் குணமாகி வீடு திரும்பும் நிகழ்வுகள் சிறு நம்பிக்கையை அளித்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக பிரபல நடிகை ஸ்ரேயா தனது கணவருடன் ஆண்ட்ரேய் கோச்சேவுடன் (Andrei Koscheev) ஸ்பெயின் நாட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது கணவருக்கு காய்ச்சலும் அதிகப்படியான இருமலும் இருந்துள்ளது. இதனையடுத்து கொரோனா அறிகுறியாக இருக்கலாம் என்று எண்ணி மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அவருக்கு செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா இல்லை என்பது உறுதியானது.

இருப்பினும் மருத்துவமனையில் கொரோனா பாதித்தோர் அதிக அளவில் இருப்பதால் மருத்துவமனையில் இருப்பது பாதுகாப்பானது அல்ல என்று கூறி இருவரையும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளும் படி மருத்துவர்கள் அறிவுருத்தியுள்ளனர். இதனையடுத்து இருவரும் தங்களது வீட்டில் தனித்தனி அறைகளில் வசித்து வருகின்றனர். தற்போது அவரது கணவர் உடல் நலம் தேறிவருகிறாராம்.

Entertainment sub editor