''தூய்மை பணியாளர்களுக்கு ஏதாவது செய்யனும்..'' - லாரன்ஸ் செய்த உதவி - தயாரிப்பாளர் நெகிழ்ச்சி.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் லாரன்ஸ் தூய்மை பணியாளர்களுக்கு செய்த உதவி குறித்து தயாரிப்பாளர் கதிரேசன் நெகிழ்ச்சியான அறிக்கையை வெளியிட்டுள்ளார். 

நடிகர் லாரன்ஸ் செய்த உதவி | producer kathiresan about lawrence's help for sanitary workers

உலகம் முழுவதும் கொரோனா நோயின் அச்சுறுத்தலால் முடங்கி போய் இருக்கிறது. நாளுக்கு நாள் பயம் அதிகரித்து கொண்டே போகிறது. மக்கள் அனைவரும் வீட்டிற்குள் அடங்கி இருக்கின்றனர். மேலும் தமிழகத்தில் போதுமான மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திரைப்படத்துறையை சேர்ந்த பலரும் தங்களால் முடிந்த பண உதவியை நிவாரண நிதிக்கு அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் செய்த உதவி குறித்து தயாரிப்பாளர் கதிரேசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, ''இன்று ராகவா லாரன்ஸிடம் தொலைப்பேசியில் பேசிய போது, நம் வீட்டு குப்பைகளை முகம் சுளிக்காமல் எடுத்து செல்லும் தூய்மை பணியாளர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும், அதனால் என் சம்பளத்தில் 25 லட்சத்தை அவர்களுக்கு வழங்க வேண்டும் என விரும்பினார். இதையடுத்து அதற்கான பணியில் இறங்கியுள்ளோம். தூய்மை பணியாளர்களின் வங்கி கணக்கில் பணத்தை செலுத்தவுள்ளதால், அவர்கள் தங்களின் அடையாள அட்டை மற்றும் அடையாள அட்டையில் உள்ளவரின் வங்கி கணக்கு விவரங்களை 63824 81658 என்ற எண்ணுக்கு வாட்சப் மூலம் அனுப்புங்கள்'' என அவர் தெரிவித்துள்ளார். 

 

Entertainment sub editor