www.garudabazaar.com

"டைரக்டர்.. இசையமைப்பாளர்.. பாடலாசிரியர்"... #AV33 படத்தில் நடித்த பன்முக பிரபலம்! போடு வெடிய!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல இசை அமைப்பாளரும், இளையராஜாவின் தம்பியுமான கங்கை அமரன், பல படங்களில் வசன கர்த்தாவாகவும், பல ஹிட் பாடல்களையும் எழுதிய பாடலாசிரியராகவும், பல ஹிட் படங்களை இயக்கிய இயக்குநராகவும் பிரபலமாக உள்ளார்.

Gangai amaran acting after 8years director Hari film #AV33

இசை அமைப்பாளராக, ஒரு விடுகதை ஒரு தொடர்கதை, சுவரில்லாத சித்திரங்கள் , ராமாயி வயசுக்கு வந்துட்டா, மௌன  கீதங்கள், வாழ்வே மாயம், நம்ம ஊரு நல்ல ஊரு, என் தங்கச்சி படிச்சவ போன்ற மாபெரும் ஹிட் படங்கள் உட்பட சுமார் 55 படங்களுக்கு பணிபுரிந்துள்ளார்.

ஆரம்பத்தில், 1979-ல் ‘புதிய வார்ப்புகள்’, 80-ல்  ‘பாமா ருக்மணி’ படங்களில் நடித்த கே.பாக்கியராஜ்-க்கு டப்பிங் குரல் கொடுத்தார் கங்கை அமரன்.

அதன் பின்பு பாடகராகவும் ஏழு படங்களில் பாடியுள்ளார். சூப்பர் ஹிட் படமான ‘கோழி கூவுது’ படம் மூலம் டைரக்டராகவும் மாறினார்.

தொடர்ந்து எங்க ஊரு பாட்டுக்காரன், செண்மகமே செண்பகமே, கரகாட்டக்காரன், கும்பகர தங்கையா, வில்லு பாட்டுக்காரன், சின்னவர், தெம்மாங்கு பட்டுக்காரன் போன்ற ரிகார்ட் பிரேக் செய்த படங்கள் உட்பட சுமார் 19 படங்களை கங்கை அமரன் டைரக்ட் செய்துள்ளார்.

அதேபோல் 16 வயதினிலே படத்தில் இடம் பெற்ற ‘செந்தூரப்பூவே.. செந்தூரப்பூவே’, ‘சோளம் விதக்கையிலே’.. இந்த பாடல்கள் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார் . ‘கிழக்கே போகும் ரயில்’  படத்தில் ‘பூவரசம்பூ பூத்தாச்சு’ பாடல், ‘முள்ளும் மலரும்’ படத்தில் ‘நித்தம் நித்தம் நெல்லு சோறு’ பாடல், ‘நிழல்கள்’ படத்தில் ‘பூங்கதவே’ போன்ற சூப்பர் ஹிட் பாடல்களை எழுதியுள்ளார்.

டைரக்டர் வெங்கட் பிரபுவின் தந்தையான இவர் அவ்வபோது முக்கிய கேரக்டரில் நடிக்கவும் செய்வார். கரகாட்டக்காரன், இதயம், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், சென்னை - 28, போன்ற படங்களில் நடித்துள்ளார். 2013-க்கு பிறகு, இந்நிலையில் மீண்டும் பிரபல டைரக்டர் ஹரி இயக்கத்தில் பெயரிடப்படாத #AV33 என்று உருவாகும் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் ஷூட்டிங் காரைக்குடியில் நடந்து வருகிறது. நடிகர் அருண்விஜய் ஹீரோவாக நடித்து வரும் இந்த படத்தில், கதையின் ஒரு முக்கிய திருப்பமான காட்சியில் ஜோசியராக கங்கை அமரன் நடித்துள்ளார்.  காலையில் கதை காட்சிகளும்.. இரவில் சண்டை காட்சிகளுமாக இரவு பகலாக அருண் விஜய் நடித்து இப்படத்தில் வருகிறார். தூத்துக்குடி, காரைக்குடியைத் தொடர்ந்து ராமேஸ்ரவத்தில் தொடர்ந்து படபிடிப்பு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

அருண்விஜய், பிரியா பவானிசங்கர், ராதிகா, யோகிபாபு, கருடா ராம், ராஜேஷ், தலைவாசல் விஜய், ஜெயபாலன், புகழ், போஸ் வெங்கட், இமான் அண்ணாச்சி, ஐஸ்வர்யா, அம்மு அபிராமி மற்றும் பலர் நடிக்கும் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்துக்கு அனல் அரசு சண்டை காட்சி அமைக்கிறார். Drumsticks புரொடக்‌ஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.

Also Read: ஹரி பட Shoot- ங்கின் போது நடிகர் அருண் விஜய்க்கு நடந்தது என்ன?.. வெளியான சிகிச்சை Photo!

Gangai amaran acting after 8years director Hari film #AV33

People looking for online information on Arun Vijay, Hari will find this news story useful.