www.garudabazaar.com

"ஆரிக்கு மட்டும் ஏன் இப்படி பண்றீங்க?"... விஜய் டிவியிடம் கேள்வி எழுப்பும் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த வாரம் போட்டியாளர்களிடம் பிக்பாஸ் தனிமையில் பேசுகிறார். அவர்கள் குடும்பம், வாழ்க்கை போன்றவற்றை நினைவுபடுத்தி அவர்கள் உறுதியை டெஸ்ட் செய்கிறார். எமோஷனலாக போட்டியாளர்களை உறுதிப்படுத்தும் ஒரு மனோதத்துவ முயற்சி இது என்று பலரும் கருதுகின்றனர்.

why aari confession scenes are telecasted in channel ஆரிக்கு மட்டும் ஏன் இப்படி

இந்நிலையில் முதல் நாள் ஷிவானி மற்றும் ரியோ கண்கலங்கியது பார்ப்பவர்க்ளின் மனதை உடைக்கும் வண்ணம் இருந்தது. அதுவும் ஷிவானி என்னால் சமாளிக்க முடியவில்லை என்று, தனது தாயை நினைத்து தேம்பி தேம்பி அழுதார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஆரியிடம் பிக்பாஸ் பேசினார். அப்போது ஆரி கண்கலங்கியுள்ளார். ஆனால் அந்த காட்சிகளை சேனலில் ஒளிபரப்பாமல் Hotstarல் மட்டும் ஒளிபரப்பியது ஆரி ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது.

இந்நிலையில் பலரும் "ஏன் ஆரிக்கு மட்டும் இப்படி அநீதி நடக்கிறது. ஆரி பிக்பாஸ் டைட்டிலை ஜெயித்தால் சமூக நலத்திற்காக அவர் நிச்சயம் அதை செலவிடுவார் ஆனால் இங்கு அன்பு, சொம்பு, மிக்ஸர் கேங் ஜெயித்தால் 10 பைசா கூட சமூகத்துக்கு உதவி செய்ய மாட்டார்கள்"  என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

"ஆரிக்கு மட்டும் ஏன் இப்படி பண்றீங்க?"... விஜய் டிவியிடம் கேள்வி எழுப்பும் ரசிகர்கள்..! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

why aari confession scenes are telecasted in channel ஆரிக்கு மட்டும் ஏன் இப்படி

People looking for online information on Aari, Biggboss4tamil will find this news story useful.