www.garudabazaar.com

ஆரிய பார்த்து ரம்யா 'அப்படி' என்ன சொன்னாங்க?... ரசிகர்கள் கேள்வி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ஷிவானி அடிக்கடி சென்று பாத்திரங்கள் கழுவ முடியாது என சொல்லியதால், கடந்த வாரம் அந்த பிரச்சினை பஞ்சாயத்துக்கு வந்தது. கடைசியில் வீட்டின் கேப்டனான ரம்யா இரண்டு பேர் வாலண்டியர் செய்யலாம் என சொல்லி அதற்கு முற்றுப்புள்ளி வைக்க, ஆரி அதற்கு கமா போட்டு தொடர்ந்தார். கடைசியில் இந்த விஷயம் ஒருவழியாக முடிவுக்கு வந்தது.

Which word Ramya Pandian used against Aari Arjunan?

இந்த நிலையில் ரம்யாவின் கேப்டன் செயல்பாடுகள் குறித்து நேற்று கமல் போட்டியாளர்களிடம் கேள்வி எழுப்பினார். பலரும் தங்களது கருத்துக்களை வெளிப்படையாக பேசினார்கள். சில குறைகள் இருந்தாலும் அவர் திறமையாக செயல்பட்டார் என்றே பலரும் கருத்து சொன்னார்கள். அப்போது ஆரியின் முறை வந்தது. அவர் ரம்யா நன்றாகவே செய்தார். டாஸ்க்கின் போது ஒரு இடத்தில் அவர் நான் இப்போ கேப்டன் இல்ல என்றார்.

மேலும் நான் அவரிடம் கேட்ட கேள்விக்கு ஒரு வார்த்தை சொன்னார். அது எனக்கு கஷ்டமாக இருந்தது. ஆனால் திரும்ப மறுநாள் வந்து ஸாரி கேட்டார். என்றார். பதிலுக்கு ரம்யா தான் அன்றே பேசிவிட்டதாக கமலிடம் கூறினார். அதோடு அந்த விஷயம் முடிந்தது. ஆனால் அது என்ன வார்த்தை என கமல், ஆரி, ரம்யா மூவருமே கூறவில்லை. மேலும் அந்த காட்சியும் காட்டப்படவில்லை.

இதைப்பார்த்த ரசிகர்கள் அப்படி என்ன தான் சொல்லி இருப்பாங்க ஆரிய பார்த்து? என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Which word Ramya Pandian used against Aari Arjunan?

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.