www.garudabazaar.com

எல்லாரும் அவங்களுக்காக 'வருத்தப்பட்டுட்டு' இருந்தப்போ அவரு மட்டும்...

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான அர்ச்சனா வாக்குகள் அடிப்படையில் நேற்று வீட்டைவிட்டு வெளியேறி இருக்கிறார். முன்பே சமூக வலைதளங்களில் இதுகுறித்து தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் தற்போது அது உண்மையாகி இருக்கிறது. கடந்த வாரம் ரமேஷ், நிஷா மற்றும் இந்த வாரம் அர்ச்சனா என தொடர்ந்து அடுத்தடுத்து மூன்று போட்டியாளர்கள் வெளியேறி இருக்கின்றனர்.

Balaji discuss about Kitchen with Ramya, Netizens reacts

இதனால் வீட்டில் தற்போது போட்டியாளர்கள் எண்ணிக்கை ஒன்பது ஆக குறைந்துள்ளது. இதனால் இந்த வார நாமினேஷனில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அர்ச்சனா வெளியேறியதால் அடுத்த கேப்டனை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை கமல் அவருக்கு அளித்தார். இதையடுத்து ரம்யா, பாலாஜி இருவரில் பாலாஜியை அர்ச்சனா கேப்டனாக தேர்வு செய்தார். இதனால் இந்த வாரம் கேப்டன் டாஸ்க் எதுவும் இல்லாமல் பாலாஜி கேப்டனாகி உள்ளார்.

அர்ச்சனா வெளியேறிய பின் அனிதா, ஆரி, பாலாஜி, ரம்யா உள்ளிட்டோர் அவரைப்பற்றி பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது பாலாஜி அவங்க போய்ட்டாங்க இனிமே சோத்துக்கு என்ன பண்றது? என கவலைப்பட்டார். தொடர்ந்து இந்த வீட்டோட புதிய அன்னபூரணி நீங்க தான் என ரம்யாவுக்கு பட்டம் சூட்டி இருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு மட்டும் ஒரு கவலை பாஸ் என மீம் போட்டு அவரை கிண்டலடித்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Balaji discuss about Kitchen with Ramya, Netizens reacts

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.