www.garudabazaar.com

பிக்பாஸ் வீட்டைவிட்டு 'வெளியேறிய' அர்ச்சனா... இனி என்ன நடக்கும்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆரி, சோம், ஆஜீத், ஷிவானி, அனிதா, ரியோ, அர்ச்சனா ஆகியோர் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் இடம்பிடித்து இருந்தனர். இதனால் பிக்பாஸ் வீட்டைவிட்டு இந்த வாரம் யார் வெளியேறுவார்கள்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவியது. நேற்று ஆரி, ரியோ இருவரும் காப்பாற்றப்பட்டனர். தொடர்ந்து இன்று ஷிவானி, அனிதா, சோம் ஆகியோரை கமல் காப்பாற்றினார்.

Who is Evicted this Week in Bigg Boss House?, Read Here!

கடைசியில் ஆஜீத், அர்ச்சனா இருவர் மட்டுமே எஞ்சினர். இதைப்பார்த்த அர்ச்சனா கண்டிப்பா நான் தான் இந்த வாரம் வெளியில போறேன் என ரியோவிடம் சொல்லி, அவருக்கு ஆறுதல் கூறிக்கொண்டு இருந்தார். அதேபோல ஆஜீத் காப்பாற்றப்பட்டு அர்ச்சனா வெளியேற்றப்பட்டு உள்ளார். கடந்த வாரம் ரமேஷ், நிஷா என இருவர் வெளியேறிய நிலையில் தற்போது அர்ச்சனாவும் அந்த லிஸ்டில் இணைந்து இருக்கிறார்.

அடுத்த வாரம் வீட்டின் கேப்டனாக தேர்வான நிலையில் அர்ச்சனா எவிக்ட் ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது. வலிமையான போட்டியாளர்களில் ஒருவரான அர்ச்சனா வீட்டைவிட்டு வெளியேறி இருப்பதால் இனி ஆட்டம் எப்படி மாறும்? என்பது தெரியவில்லை. வழக்கம்போல நாம் காத்திருந்து பார்க்கலாம்.

தொடர்புடைய இணைப்புகள்

Who is Evicted this Week in Bigg Boss House?, Read Here!

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.