Udanprape others
www.garudabazaar.com

“10 பவுன்ல தாலி வேணும்!” - புலம்பிய தாமரை.. உடனே பாவனி சொன்ன உருக்கமான கமெண்ட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டுக்குள் அனைவரும் கதை சொல்லும் டாஸ்கில் ஒவ்வொருவராக தங்களுடைய கதைகளைக் கூறி வந்தனர். ஒவ்வொருவரின் கதையிலும் ஏதோ ஒரு திருப்பமும் வலியும் நிறைந்து இருக்கவே செய்கிறது. சிலரின் கதைகளில் வலிகள் இருந்தாலும், கதைசொல்லும் விதத்தில் அது இல்லை என்று பலரும் அவர்களின்  கதை சொல்லும் விதத்திற்கு டிஸ்லைக் போட்டிருக்கின்றனர்.

thamaraiselvi talks about thaali pavani emotional biggbosstamil5

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் நடியா சாங், தன்னுடைய கதையை கூறியிருந்தார். மிகவும் உருக்கமான நடியாவின் கதைக்குப் பிறகு பாவனி மற்றும் அண்ணாச்சி இருவரும் பேசிக் கொண்டனர்.

thamaraiselvi talks about thaali pavani emotional biggbosstamil5

பொதுவாகவே பாவனி மற்றும் அண்ணாச்சி இருவரும் பேசிக்கொள்ளும் உரையாடல்கள் நெகழ்ச்சியாக இருக்கக்கூடியவை. ஒரு அண்ணன் தங்கை உறவாக இவர்கள் பேசிக் கொள்ளும் விஷயங்கள் பார்ப்பதற்கு நெகிழ்ச்சியாக இருக்கும்.

thamaraiselvi talks about thaali pavani emotional biggbosstamil5

இந்த நிலையில் பாவனியும், அண்ணாச்சியும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அங்கு வந்த தாமரைச்செல்வி, ஏதேதோ புலம்பத் தொடங்கினார். குறிப்பாக நடியாவின் தாயாரைப் பற்றி குறிப்பிட்டு, “ஒரு பெற்ற அம்மா இப்படியுமா இருப்பாங்க?” என்று புலம்பினார். பின்னர் ஏதேதோ பேசிய தாமரைச்செல்வி சிறுவயதிலிருந்து எந்த சந்தோஷத்தையும் தான் அனுபவிக்கவில்லை என்றும், நல்ல நகை கூட போட்டுக்கொள்ளவில்லை என்றும் பேசினார்.

thamaraiselvi talks about thaali pavani emotional biggbosstamil5

குறிப்பாக தனக்கு பத்து பவுனில் தாலி போட வேண்டும் என்று ஆசை என்றெல்லாம் தாமரை செல்வி கூறிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த பாவனி, இதை கேட்டுவிட்டு, “நானும் கூட ஒரு அழகான தாலியை வாங்கி வைத்திருந்தேன். அதைப் போட்டுக்கதான் வழி இல்லை” என்று சிரித்துக்கொண்டே பேசிவிட்டார்.

பாவனியின் பேச்சில் சிரிப்பு இருந்தாலும், அதன் பின்னால் மிகப்பெரிய வலி இருக்கிறது என்பதை ரசிகர்களும் உணர்ந்தே இருக்கின்றனர்.

thamaraiselvi talks about thaali pavani emotional biggbosstamil5

5 வருடங்களாக கணவரை இழந்து தனிமையில் வாடி வரும் பாவனி, தன்னுடைய தனிமையை அவ்வப்போது பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்களிடையே வெளிப்படுத்தி வருகிறார். மேலும் தன்னுடைய அடுத்த திருமண வாழ்க்கை, எதிர்காலத் திட்டங்கள் குறித்த தன் குழப்பங்களை பகிர்ந்து வருகிறார். அவருக்கு ரசிகர்கள் தொடர்ச்சியாக ஆறுதல் கூறி வருகின்றனர்.

தாமரைச்செல்வி, அண்மையில் தான் தன்னுடைய கதையை பிக்பாஸ் வீட்டுக்குள் கூறியிருந்தார்.

thamaraiselvi talks about thaali pavani emotional biggbosstamil5

அதன்படி தன்னுடைய முதல் கணவர் டார்ச்சர் செய்ததை அடுத்து, இரண்டாவது கணவருடன் வாழ்ந்து வந்த தாமரைச்செல்வி, அவரையும் பிரிந்து தன் இரண்டு மகன்களை வளர்த்து வந்த போது, முதல் மகனை அழைத்துச் சென்று விட்டார்கள் என்றும், நான்கைந்து மாதங்களாக அவரை பார்க்கவே இல்லை என்றும், தன்னைப்பற்றி தவறாக தன் மகனிடம் சொல்லி தன்னையும் தன் மகனையும் பிரித்து வைத்துவிட்டார்கள் என்றும் தேம்பி தேம்பி அழுதார்.

thamaraiselvi talks about thaali pavani emotional biggbosstamil5

இதனிடையே பிக்பாஸ் வீட்டுக்குள் நடந்த பலூன் உடைத்தல் போட்டியில் தாமரைச்செல்வி கடைசியாக சின்னப்பொண்ணுவுடன் மோதி வெற்றி பெற்றுவிட்டார். தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் தலைவராகவும் தாமரைச்செல்வி திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

thamaraiselvi talks about thaali pavani emotional biggbosstamil5

People looking for online information on BiggBossTamil5, ImmanAnnachi, Nadiyachang, PavaniReddy, Thamaraiselvi will find this news story useful.