Udanprape others
www.garudabazaar.com

"என்ன பிக்பாஸ்? இதையெல்லாம் எப்படி Allow பண்றீங்க?".. டைரக்டா ‘பெருசு’ கிட்ட முறையிட்ட சுருதி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டுக்குள் காயின் டாஸ்க் களைகட்டி இருக்கிறது என்று சொல்லலாம்.

suruthi complaints to biggboss about what happening

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் தற்போது அடுத்தடுத்த காட்சிகளில் விறுவிறுப்பு அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. அதன்படி பஞ்சதந்திரம் என்கிற இந்த டாஸ்கில் காயின்களை போட்டியாளர்கள், நாமினேஷன் லிஸ்டில் இருப்பவர்களுக்காக எடுத்து வைத்துக் கொடுத்து உதவலாம் என்கிற சலுகை வழங்கப்பட்டு இருக்கிறது.

அதன்படி பலரும் காயின்களை எடுத்து வைத்துக் கொள்கின்றனர். சிலர் தெரியாமல் எடுக்கின்றனர். எடுத்து பிக்பாஸிடம் காட்டிவிட்டு, தான் எடுத்ததாக ரிஜிஸ்டர் செய்ய வேண்டும் என்பது முக்கிய விதி. முன்னதாக இந்த விதிகளை, அண்ணாச்சி  பிக்பாஸ் வீட்டுக்குள் படித்துக் காட்டினார்.

இதனைத் தொடர்ந்து ஒருவருக்கு தெரியாமல் ஒருவர் காயினை எடுப்பது, குழுவாக இணைந்து காயின்களை எடுத்து வைத்துக்கொள்வது, வேறு ஒரு குழுவைச் சேர்ந்த ஒருவரிடம் தன்னிடம் இருக்கும் காயினை மறைப்பது உள்ளிட்ட அனைத்தும் அரங்கேறின. இந்த நிலையில் தாமரை அபிஷேக்கிடம் தனக்கு காயின் வேண்டும் என்று அழ, மனம் கேட்காத அபிஷேக் வருணிடம் சென்று கெஞ்சினார்.

அப்போது வருண் சிரித்தபடி அவரை கிண்டல் செய்ய, அக்ஷராவும் “உனக்கு எதுக்கு இந்த வேலை” என்று அபிஷேக்கிடம் கேட்டு அனுப்பிவிட்டார். அதன்பிறகு காயின் தன்னிடம் இருந்ததை அக்‌ஷராவே பிக்பாஸிடம் காட்டிவிட்டார். காட்டிவிட்டு மறைத்து வைத்துக் கொண்டார்.

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் மெசேஜ், சிக்னல், மூளை சலவை மற்றும் இன்ஃப்ளூயன்ஸ் பண்ணப்படுவது உள்ளிட்டவற்றை பற்றி பிக்பாஸிடம் நேரடியாக சென்று சுருதி புகாராக முன்வைக்கிறார். “என்ன பிக் பாஸ் இதெல்லாம்? எப்படி நீங்க அனுமதிக்கிறீங்க?” என்று கடுப்பாகி கேட்கிறார். இந்த காட்சி புரோமோவில் இடம் பெற்றது.

suruthi complaints to biggboss about what happening

People looking for online information on BiggBossTamil5, Coin Task, Suruthi will find this news story useful.