www.garudabazaar.com

'அவங்க' நல்லவங்களா, கெட்டவங்களா?... சுரேஷ் சக்கரவர்த்தியின் 'பதில்' இதுதான்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் 75 நாட்களை கடந்த நிலையில், வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே வந்த அர்ச்சனா நேற்று வெளியேறி இருக்கிறார். இதனால் தற்போது பிக்பாஸ் வீட்டில் ஆரி, ஆஜீத், பாலாஜி, ஷிவானி, அனிதா, ரம்யா, ரியோ, சோம் மற்றும் கேப்ரியலா ஆகியோர் மட்டுமே எஞ்சியுள்ளனர். இதனால் வரும் நாட்களில் போட்டி மேலும் கடுமையாக மாறும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Suresh Chakravarthy Talks about Archana's Eviction

இதுவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சுச்சி, சம்யுக்தா, சனம், நிஷா, ரமேஷ், அர்ச்சனா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். இதில் சனம் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி இருவரும் வெளியேறியது ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்தது. மீண்டும் இருவரும் வைல்டு கார்டு போட்டியாளர்களாக உள்ளே வர வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதில் சுரேஷ் சக்கரவர்த்தி தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார். நேற்று அர்ச்சனா வெளியேறிய போது அவர், ''அன்பு டீம் கேப்டனா வெளியே போறாங்க,'' என தெரிவித்து இருந்தார். இதைப்பார்த்த ரசிகர் ஒருவர் நாயகன் பாணியில், ''அர்ச்சனா நல்லவங்களா, கெட்டவங்களா,'' என கேட்க, பதிலுக்கு சுரேஷ், '' அவங்களும் நம்மள போல ஒரு மனிதர் தான் ஆனால்,'' என பதிலளித்து இருக்கிறார்.

தொடர்புடைய இணைப்புகள்

Suresh Chakravarthy Talks about Archana's Eviction

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.