www.garudabazaar.com

அந்த 'குரூப்' பேரு இதுதான்... இன்னொரு 'முகம்' இருக்கு... உண்மைகளை 'உடைத்த' சுச்சி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து அனைவரும் எதிர்பார்த்தது போலவே சுசித்ரா வெளியேறி விட்டார். வைல்டு கார்டு எண்ட்ரி கொடுத்த சுச்சி 3 வாரங்களிலேயே வெளியேறியது லேசான அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தொடர்ந்து கமலிடம் பேசிய அவர் சக போட்டியாளர்கள் குறித்த உண்மையை தைரியமாக வெளிப்படுத்தினார்.

Suchitra talks about Bigg Boss contestants, Twitter Reacts

உள்ளே அர்ச்சனா, சோம், நிஷா, ஜித்தன் ரமேஷ், ரியோ  உள்ளிட்டோர் ஒரு குரூப்பாக இருக்கின்றனர். அவர்கள் குரூப்புக்கு வேல் பிரதர்ஸ் என பெயர் வைத்து கேமரா முன்னாலும் அதை சொல்லி இருக்கின்றனர். கேப்ரியலா இந்த குரூப் உள்ளே வருவதும், போவதுமாக இருக்கிறார். ஆனால் அவர் அன்பானவர். ரம்யா பாண்டியன் ரொம்ப தெளிவானவர். ஆரி ரொம்ப நேர்மையானவர். ரமேஷ் இறங்கி வேலை செய்ய மாட்டார்.

சனம் யார் கிண்டல் செய்தாலும் அதை மெடல் போல எடுத்துக்கொண்டு மிகவும் தைரியமாக விளையாடி வருகிறார். பாலாஜி என்னோட கிரைம் பார்ட்னர். அவர் பைனல் வரைக்கும் வருவார்னு நினைக்குறேன். அனிதா ரொம்ப அற்புதமானவர். அர்ச்சனாவுக்கு இன்னொரு முகம் இருக்கு. ரியோ நிறைய கிசுகிசு பேசுறாரு. ஷிவானி எப்போதாவது தான் பேசுவாங்க. சோம் நல்லவர் தான். ஆனால் எடுப்பார் கைப்பிள்ளையாக இருக்கிறார்.

சுச்சியின் இந்த பேச்சை கேட்ட நெட்டிசன்கள் நீங்க சொன்னது அத்தனையும் உண்மை தான். உங்கள கிண்டல் பண்ணி போட்ட எல்லா ட்வீட் டெலிட் பண்ணிடறோம் மொதல்ல என அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். இதனால் ட்விட்டரில் இந்தியளவில் #Suchi ட்ரெண்டாகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Suchitra talks about Bigg Boss contestants, Twitter Reacts

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.