www.garudabazaar.com

அவ்ளோ 'பாசமா' குடுத்துட்டு... இப்போ ஏன் 'திருப்பி' கேட்குறீங்க?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மணிக்கூண்டு டாஸ்க்கில் தாங்கள் மிகவும் மோசமாக செய்ததற்கு தானும் ஒரு காரணம் என்பது சுச்சியின் எண்ணமாக இருந்தது. இதுகுறித்து ரம்யாவிடமும் அவர் ஆலோசனை செய்ய அதெல்லாம் ஒண்ணும் இல்லை. எல்லாரும் தான் காரணம் என ரம்யா அவருக்கு ஆறுதல் கூறினார். ஆனால் சுச்சி அஞ்சியது போலவே ஜெயிலை மீண்டும் திறந்த பிக்பாஸ் மணிக்கூண்டு டாஸ்க்கை வைத்து பாலாஜி, சுச்சியை ஜெயிலுக்கு அனுப்பி வைத்தார்.

Suchitra asked Friendship Band to Anitha, Netizens Confused

ஏற்கனவே குற்ற உணர்ச்சியில் இருந்ததாலோ என்னவோ ஷிவானி தன்னை முறைத்து பார்ப்பதாக பாலாஜியிடம் சொல்ல, அவர் எண்ணெயில் போட்ட அப்பளம் போல குதித்தார். பாலாஜி எரிந்து, எரிந்து விழுந்ததால் டென்சன் ஆன சுச்சி வண்டியை திடீரென அனிதா பக்கம் திருப்பினார். தான் கொடுத்த பிரண்ட்ஷிப் பேண்டை அவர் பயன்படுத்தவில்லை எனக்கூறி அதை திருப்பி கேட்டார்.

இதையடுத்து அனிதா அதை எடுத்து வந்து சுச்சியிடம் கொடுத்து விட்டு சென்று விட்டார். இதைப்பார்த்து கொண்டிருந்த சனம் பின்னாலேயே சென்று அனிதாவுக்கு ஆறுதல் கூறினார். அனிதாவிடம் வாங்கிய அந்த பேண்டை பிக்பாஸ் கேமராவுக்கு கட்டிவிட்டு சுச்சி அழகு பார்த்தது குறிப்பிடத்தக்கது. இதைப்பார்த்த ரசிகர்கள் கிஃப்டா குடுத்துட்டு எப்படி அதை திருப்பி கேட்றாங்க? என சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

தொடர்புடைய இணைப்புகள்

Suchitra asked Friendship Band to Anitha, Netizens Confused

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.