www.garudabazaar.com

"பேரு கெட்டு போய்டும்னு..".. "பிரபல சீரியல்ல இருந்து ரச்சிதா வெளியேற காரணம் இதுவா?".. 'Exclusive'..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த 2011 ஆம் ஆண்டு ஒளிபரப்பான 'பிரிவோம் சிந்திப்போம்' என்னும் சீரியல் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை ரச்சிதா.

serial actress rachitha exclusive interview about her serials

இதனைத் தொடர்ந்து, பல தொடர்களில் ரச்சிதா நடித்து வந்தாலும், அவரை பட்டித் தொட்டி எங்கும் கொண்டு போய் சேர்த்த தொடர் என்றால் அது 'சரவணன் மீனாட்சி' தான்.

இந்த தொடரில் தன்னுடன் நடித்து வந்த நடிகர்கள் மாறினாலும், ரச்சிதா மட்டும் தொடர்ந்து ஹீரோயினாக நிலைத்து, சீரியலின் முடிவு வரை அவரே நடித்திருந்தார்.

புதிய சீரியலில் ரச்சிதா

இதன் பிறகு, 'நாம் இருவர், நமக்கு இருவர்' என விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தொடரில் நடித்து வந்த ரச்சிதா, அதிலிருந்து விலகினார். நடுவே ஒரு திரைப்படத்திலும் அவர் நடித்திருந்தார். இதன் பிறகு, கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒரு சீரியலிலும் ரச்சிதா தற்போது நடித்து வருகிறார்.

பிரத்யேக பேட்டி

இந்நிலையில், தற்போது 'Behindwoods' சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றினை நடிகை ரச்சிதா அளித்துள்ளார். இதில் பேசிய ரச்சிதா, தான் பல சேனல்கள் மாறி மாறி சீரியல் நடித்து வந்தது குறித்து, தான் சந்தித்த விமர்சனங்கள் பற்றி வெளிப்படையாக தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

பெயர் கெட்டு போயிடும்

"ஒரு ஆர்டிஸ்ட்டாக, நல்ல ஆஃபர் கிடைக்கும் போது, வேறு சேனலில் சென்று விடுவார்கள். அதனைத் தான் நானும் செய்தேன். அப்படி இருக்கும் போது, பலரும் என்னை பற்றி பல விதமான கருத்துக்களைத் தெரிவித்து வந்தனர். ஒரு பக்கம் சமூக வலைத்தளங்களில் இஷ்டத்துக்கு எழுத ஆரம்பித்தார்கள். ஒரு மேனேஜர் கூட என்னை அழைத்து, அந்த சேனலுக்காக தொடர்கள் செய்ய வேண்டாம். உங்களின் பெயர் கெட்டு போய் விடும் என எச்சரித்தார்.

மழுப்பல்

பெயர் கேட்டு போகும் அளவுக்கு அங்கு சென்று நான் என்ன செய்ய போகிறேன் என அந்த மேனேஜரின் கருத்துக்கு நான் கேள்வி கேட்டேன். அதற்கு பிறகு அந்த நபர், மழுப்பலுடன் பேசிக் கடந்து சென்றார். இது மாதிரி நிறைய பாலிடிக்ஸ் உள்ளே இருக்கு" என ரச்சிதா தெரிவித்தார்.

சினிமா வாய்ப்பு

தொடர்ந்து, தனக்கு வந்த பட வாய்ப்புகளை புறக்கணித்தது பற்றி பேசிய ரச்சிதா, "நான் திரைப்பட வாய்ப்புகளை ஏற்றுக் கொள்ளாமல் போனதற்கு மிக முக்கிய காரணம், என்னுடைய Dates தான். அதே போல, சினிமா வாய்ப்பு வருகிறது என்பதற்காக உடனடியாக ஒரு திரைப்படம் பண்ண வேண்டும் என எண்ணவில்லை. யோசித்து சிறந்த கதையில் நடிக்க வேண்டும் என்றும் எண்ணியிருந்தேன். சில நேரங்களில் நல்ல படங்கள் வந்த போதும், Dates காரணமாக அந்த படங்களில் நடிக்க முடியாமல் போனது.

சீரியல் அனுபவங்கள்

மேலும், சமீபகாலத்தில் எனக்கு நேரம் கிடைத்ததால், கன்னட மொழியில் இரண்டு திரைப்படங்கள் நடித்து முடித்துள்ளேன்' என தெரிவித்துள்ளார். மேலும், தன்னை பற்றிய மீம்ஸ்கள் குறித்தும், சீரியல் ஷூட்டிங் அனுபவங்கள் உள்ளிட்ட பல விஷயங்களையும் ரச்சிதா இந்த வீடியோவில் பகிர்ந்துள்ளார்.

"பேரு கெட்டு போய்டும்னு..".. "பிரபல சீரியல்ல இருந்து ரச்சிதா வெளியேற காரணம் இதுவா?".. 'EXCLUSIVE'.. வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

serial actress rachitha exclusive interview about her serials

People looking for online information on Exclusive interview, Rachitha, Saravanan meenakshi, Vijay tv will find this news story useful.