www.garudabazaar.com
www.garudabazaar.com

சென்னையில் பிரபல சீரியல் நடிகர் தற்கொலை.... இரங்கல் தெரிவிக்கும் ரசிகர்கள்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சீக்கிரமே பணம் புகழ் அடையக்கூடிய கவர்ச்சியான இடமாக காட்டப்படுவது சினிமா  துறையாகும். ஆனால் சமீப காலங்களில் சினிமா துறையில் தற்கொலைகளும் அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக சீரியல்  நடிகர்கள் அடுத்தடுத்த மரணித்து வருவது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்படியே பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் பிரபலமடைந்த நடிகை சித்ரா ஹோட்டல் அறையில் மரணமடைந்ததை தொடர்ந்து பிரபல வெப்சீரிஸ் ஒன்றில் நடித்து வந்த நடிகர் ஸ்ரீவட்சவ் கடந்த வாரம் மரணமடைந்த செய்தி ரசிகர்களை உலுக்கியது.

serial actor committs suicide பிரபல சீரியல் நடிகர் மரணம் அடைந்தார்

இந்நிலையில்சென்னையை சேர்ந்த சீரியல் நடிகர் இந்திரகுமார் என்பவர் தற்போது தற்கொலை செய்து மரணமடைந்துள்ளார். இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த இவர் சென்னையில் ஒரு பிரபல சீரியலில் நடித்து வந்துள்ளார். நண்பர்களுடன் படத்திற்கு சென்று விட்டு தனது நண்பரின் அறையில் தனிமையில் தங்கி உள்ளார். பின்பு அங்கே அவர் மரணமடைந்துள்ளார். இதை பார்த்த நண்பர்கள் அதிர்ச்சி அடைந்த உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தற்கொலைக்கான காரணம் தெரியாத நிலையில் அவருக்கு மனைவியும் ஒரு மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்கொலை என்பது எதற்கும் தீர்வு அல்ல. உங்களுக்கோ அல்லது உங்களை சேர்ந்தவர்களுக்கோ தற்கொலை எண்ணங்கள் தோன்றினால், உடனடியாக உதவியை நாட தயங்க வேண்டாம் - மாநில சுகாதாரத் துறை தற்கொலை உதவி எண் - 104; சினேகா தற்கொலை தடுப்பு மையம் - 044-24640050.

Tags : Indrakumar

மேலும் செய்திகள்

serial actor committs suicide பிரபல சீரியல் நடிகர் மரணம் அடைந்தார்

People looking for online information on Indrakumar will find this news story useful.