www.garudabazaar.com
www.garudabazaar.com

ஆரியை பத்தி ஒரே வரியில் சொல்லுங்கன்னு கேட்ட ரசிகர்.. ஆஜீத் என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. ஆரி, பாலா, ரம்யா, சோம், ரியோ ஆகிய 5 இறுதிப்போட்டியாளர்களுள் ஆரி  பிக்பாஸ் டைட்டில் வென்றெடுத்தார். இந்நிலையில் 106 நாட்களை கடந்து பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. ஆரம்பம் முதலே யார் மனதையும் புண்படுத்தாமல் ஒரு நல்ல மனிதராக தன்னை நிரூபித்தாலும் போட்டியின் வேகத்தில மற்றவர்களுடன் சற்று பின்தங்கியே காணப்பட்டார். இந்நிலையில் அவர் பிக்பாஸில் இருந்து வெளியேறியுள்ளார்.

biggboss ajeedh live with fans ஆரியை பற்றி ஒரு வரியில் சொன்ன ஆஜீத்

இந்நிலையில் ஆஜீத் தற்போது தனது ரசிகர்கள் முன்னிலையில் லைவில் வந்திருக்கிறார். அப்போது ரசிகர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு அவர் பதில் அளித்துள்ளார். அப்படி ரசிகர் ஒருவர் "ஆரியை பற்றி ஒரு வரியில் கூறுங்கள்" என்று கேட்டதற்கு "ஆரி மிகவும் பொறுப்பான மனிதர்" என்று கூறியுள்ளார். கேபி பற்றி கேட்ட பொழுது "எனக்கு அந்த பிக்பாஸ் வீட்டில் முதன் முதலில் நண்பரானவர்கள் கேபி மற்றும் பாலா தான். எனவே அந்த உறவு எனக்கு மிகவும் ஸ்பெஷலானது" என்று கூறியுள்ளார். மேலும் தன்னுடைய வயதைப் பற்றி பலரும் பல கருத்துக்கள் தெரிவித்து வந்தாலும், தனக்கு 18 வயது தான் ஆகிறது என்றும், ஷிவானியை பற்றி கேட்டதற்கு "போட்டியாளர்கள் மத்தியில் அவரது மொக்கை ஜோக் மிக பிரபலம். அவருக்கும் எனக்கும் கூட நல்ல பாண்ட் இருக்கிறது என்று கூறியுள்ளார்.

ஆரியை பத்தி ஒரே வரியில் சொல்லுங்கன்னு கேட்ட ரசிகர்.. ஆஜீத் என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க! வீடியோ

Tags : Aajeedh

biggboss ajeedh live with fans ஆரியை பற்றி ஒரு வரியில் சொன்ன ஆஜீத்

People looking for online information on Aajeedh will find this news story useful.