www.garudabazaar.com

''சாத்தான்குளம் சம்பவம் போலதான், என் அண்ணன் இறந்தான்..'' - செம்பருத்தி ஜனனி பகீர்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல சீரியல் நடிகை ஜனனி அசோக் குமார், தனது அண்ணன் மரணம் தொடர்பாக பகீர் தகவலை தெரிவித்துள்ளார். 

சாத்தான்குளம் சம்பவம் போல தனது குடும்பத்திலும் நடந்தது - செம்பருத்தி நடிகை | Sembaruthi Serial Actress Janani Ashok Kuma

சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஜனனி அசோக் குமார். மாப்பிள்ளை, ஆயுத எழுத்து, மௌன ராகம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ள இவர், செம்பருத்தி சீரியலில் தனது ஐஷ்வர்யா கதாபாத்திரம் மூலம் மேலும் ரசிகர்களை கவர்ந்தார். மேலும் திரைப்படங்களிலும் இவர் சிறிய ரோல்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சாத்தான்குளம் சம்பவத்தை போல, தனது குடும்பத்திலும் நடந்திருப்பதாக ஜனனி தெரிவித்தார். இதுகுறித்து பேசிய இவர், ''எனது அண்ணன் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆற்றில் குளிக்க சென்ற போது, சுழலில் சிக்கி இறந்துவிட்டதாக சொன்னார்கள். ஆனால், அவனை தண்ணீருக்குள் இழுத்து, கழுத்தை நெறித்து கொலை செய்திருக்கிறார்கள். இந்த விஷயத்தில் காவல்துறைக்கும் பங்குண்டு. இது போல அந்த இடத்தில் தொடர்ந்து பலர் இறந்து வருவதாகவும்'' அவர் பகீர் தகவல் தெரிவித்தார். மேலும் இது தொடர்பான ஆதாரங்கள் பற்றி பேசிய அவர், ''எங்களிடம் இருக்கும் ஒரே ஆதாரம், எனது அண்ணன் ஆவியாக வந்து தனக்கு நடந்ததை பற்றி சொன்னதுதான். ஆனால், அதை யாரும் நம்பி எடுத்துக்கொள்ள மாட்டார்கள். இத்தனை வருடங்கள் கழித்தும், இது போல சாத்தான்குளத்தில் இருவர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது'' என அவர் வருத்தம் தெரிவித்தார். 

இதுகுறித்து ஜனனி பேசிய முழு வீடியோ இதோ. 

''சாத்தான்குளம் சம்பவம் போலதான், என் அண்ணன் இறந்தான்..'' - செம்பருத்தி ஜனனி பகீர். வீடியோ

சாத்தான்குளம் சம்பவம் போல தனது குடும்பத்திலும் நடந்தது - செம்பருத்தி நடிகை | Sembaruthi Serial Actress Janani Ashok Kuma

People looking for online information on Janani Ashok Kumar, Sathankulam Jeyaraj and Bennicks, Sembaruthi will find this news story useful.